இலங்கை செய்தி

நீர்கொழும்பில் 53 மசாஜ் நிலையங்கள் முற்றுகை!! இரு பெண்களுக்கு எச்.ஐ.வி. தொற்று உறுதி

  • March 27, 2024
  • 0 Comments

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 53 மசாஜ் நிலையங்கள் சோதனையிடப்பட்டு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டுள்ளன. அந்த மசாஜ் மையங்களின் பணிப்பெண்களில் இருவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். முறையான அனுமதியின்றி மசாஜ் நிலையங்கள் இயங்கி வருவதும் தெரியவந்துள்ளது. நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் இயங்கும் 53 மசாஜ் நிலையங்கள் கடந்த வாரம் முதல் நீர்கொழும்பு பொலிஸாரால் அவசர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. நீர்கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி, பொலிஸ் அத்தியட்சகர் எரிக் பெரேரா தலைமையில் […]

இலங்கை செய்தி

வீட்டிற்குள் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!! தங்க ஆபரணங்கள் மாயம்

  • March 27, 2024
  • 0 Comments

கடுவெல கொத்தலாவல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (27) பிற்பகல் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பெண் உயிரிழந்த இடத்தைச் சுற்றிலும் பல இரத்தக் கறைகள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இது கொலையாக இருக்கலாம் என உறவினர்கள் கூறியதால், வழக்கமாக அணியும் தங்க ஆபரணங்கள் அவரது உடலில் இல்லை என  பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கடுவெல கொத்தலாவல பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயார் எனவும், அவரது மகளும் மகனும் வேலையில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்த […]

இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் நடந்த கோர விபத்து!! ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்

  • March 27, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உரும்பிராய் புன்னாலைக் கட்டுவன் சந்தியில் சிறிய ரக உழவு இயந்திரத்தில் தோட்டத்திலிருந்து புற்களைளை ஏற்றுக் கொண்டிருந்த விவசாயி மீது லொறி மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. பலாலியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த லொறி வேகக்கட்டுப்பாட்டை இழந்ததில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தின் போது லொறியில் பயணம் செய்த சாரதி உட்பட மூவர் மது போதையில் இருந்ததாகவும் இதனால் வீதியில் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக […]

இலங்கை செய்தி

வவுனியாவில் நடந்த கோர விபத்து!! பிரபல வைத்தியர் பலி

  • March 27, 2024
  • 0 Comments

வவுனியா ஓமந்தை பகுதியில் இன்று புதன்கிழமை (27 ) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். டிப்பர் வாகனமும் கப் வாகனமும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இவ் விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.வைத்தியர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரவு 7.00மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை […]

உலகம் செய்தி

ரத்து செய்யப்பட்ட சந்திப்பை மீண்டும் திட்டமிட அமெரிக்காவிடம் கோரிக்கை

  • March 27, 2024
  • 0 Comments

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டமிட்ட பேச்சுவார்த்தைகளை திடீரென ரத்து செய்த சில நாட்களுக்குப் பிறகு, காசாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தனது இராணுவத் திட்டங்களைப் பற்றி விவாதிக்க அமெரிக்க அதிகாரிகளுடனான சந்திப்பை மீண்டும் திட்டமிடுமாறு இஸ்ரேல் கேட்டுக் கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் காசா போர்நிறுத்த தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்கா அனுமதித்ததை அடுத்து, மூத்த இஸ்ரேலிய தூதுக்குழுவின் வாஷிங்டனுக்கு திட்டமிடப்பட்ட பயணத்தை நெதன்யாகு நிறுத்தினார். அமெரிக்க அதிகாரிகள் பிடென் நிர்வாகம் இஸ்ரேலிய ரத்து மூலம் குழப்பமடைந்துள்ளதாகவும், […]

இலங்கை செய்தி

ஐயோ சாமி பாடலுக்கு எடிசன் விருது!

  • March 27, 2024
  • 0 Comments

சென்னையில் நடைபெற்ற 16 வது எடிசன் விருது வழங்கும் விழாவில் 2023 ஆம் ஆண்டின் சிறந்த உணர்வுப்பூர்வமான பாடலுக்கான விருதை “ஐயோ சாமி” என்ற பாடல் பெற்றுக் கொண்டது. இந்த பாடலை பாடிய வின்டி குணதிலக்க நேற்று (26) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். சர்வதேச திரைப்படப் பாடல்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கும் விழா சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்றது. பாடலை எழுதிய பொத்துவில் அஸ்மின் மற்றும் இசை அமைத்த சனுக விக்கிரமசிங்க ஆகியோரும் விருது வழங்கும் விழாவில் […]

ஆசியா செய்தி

துனிசியாவில் 2013ம் ஆண்டு அரசியல்வாதி கொலை வழக்கில் நால்வருக்கு மரண தண்டனை

  • March 27, 2024
  • 0 Comments

துனிசியாவில் 11 ஆண்டுகளுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர் சோக்ரி பெலெய்ட் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேருக்கு மரண தண்டனையும், இருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தண்டனைகளை பயங்கரவாத எதிர்ப்பு நீதித்துறை பிரிவின் துணை அரசு வழக்கறிஞர் புதன்கிழமை உறுதி செய்தார். இக்கொலை தொடர்பாக மொத்தம் 23 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது, மற்ற பிரதிவாதிகளுக்கு இரண்டு முதல் 120 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, ஐந்து பேர் விடுவிக்கப்பட்டனர். துனிஸில் […]

இலங்கை செய்தி

இலங்கை – சீனா இடையே 9 புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து

  • March 27, 2024
  • 0 Comments

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் 9 புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இலங்கை பிரதமர் சீனாவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் இந்த ஒப்பந்தகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும் என சீனப் பிரதமர் லீ கியான் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் உறுதியளித்துள்ளனர். அத்துடன், இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு உறுதுணையாக இருக்கும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரம் ஆகியவற்றின் அபிவிருத்திக்கு […]

இந்தியா செய்தி

கொல்கத்தா விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான இரு விமானங்கள்

  • March 27, 2024
  • 0 Comments

கொல்கத்தாவில் உள்ள ஓடுபாதையில் இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று ஆபத்தான முறையில் நெருங்கி வந்ததால், நூற்றுக்கணக்கான பயணிகள் தப்பினர். கொல்கத்தா விமான நிலையத்தில் தர்பங்கா நோக்கிச் செல்லும் இண்டிகோ விமானம் ஒன்று, ஓடுபாதையில் நுழைவதற்கு அனுமதிக்காகக் காத்திருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் மீது மோதியது. தாக்கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் இறக்கையின் ஒரு பகுதி ஓடுபாதையில் விழுந்தது, இண்டிகோ விமானத்தின் இறக்கை துண்டிக்கப்பட்டது. சிவில் ஏவியேஷன் இயக்குனரகம் அல்லது டிஜிசிஏ, இண்டிகோ ஏ320 விடி-ஐஎஸ்எஸ் […]

இந்தியா செய்தி

கெஜ்ரிவால் கைது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க தூதரக அதிகாரி – இந்தியா எதிர்ப்பு

  • March 27, 2024
  • 0 Comments

கெஜ்ரிவால் கைது குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு, அந்நாட்டு தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பியது. அமெரிக்காவின் கருத்து தேவையற்றது என வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்து தெரிவித்து உள்ளது. டில்லியில், மதுபான கொள்கை ஊழலில் தொடர்புடைய சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில், சமீபத்தில் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, ஈ.டி., எனப்படும் அமலாக்கத்துறை கைது செய்தது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம், ‛‛ […]

error: Content is protected !!