செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் அதிக வெப்பத்தால் காரில் விட்டுச் சென்ற 18 மாத குழந்தை உயிரிழப்பு

  • July 8, 2023
  • 0 Comments

ஜூலை நான்காம் தேதி விருந்துக்குப் பிறகு இரவில் சூடான காரில் விட்டுச் செல்லப்பட்ட பின்னர் அமெரிக்காவில் ஒரு தம்பதியினர் தங்கள் 18 மாத மகள் இறந்ததில் மோசமான ஆணவக் கொலைக் குற்றம் சாட்டப்பட்டனர். குழந்தை காலை 3 மணி முதல் 11 மணி வரை காரில் தனியாக விடப்பட்டது, அப்போது வெப்ப குறியீடு 105 டிகிரியாக இருந்தது. பெற்றோர் ஜோயல் மற்றும் ஜாஸ்மின் ரோண்டன் அவர்கள் 9 வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளுடன் பார்ட்டியில் கலந்து கொண்டனர், மேலும் […]

இலங்கை

யாழில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்றது. கொக்குவில் பொற்பதி பகுதியில் உள்ள மண்டபத்தில் இன்று சனிக்கிழமை கூட்டம் இடம்பெற்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, கட்சியின் பதில் செயலாளர் த.சத்தியலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், த.கலையரசன் ஆகியோரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன் , ஈ.சரவணபவன், அரியநேத்திரன்,ஶ்ரீநேசன், சாந்தி ஶ்ரீஸ்கந்தராசா முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதன்போது […]

ஐரோப்பா செய்தி

1995 ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையைக் குறிக்கும் வகையில் போஸ்னியாவில் அணிவகுப்பு

  • July 8, 2023
  • 0 Comments

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரே இனப்படுகொலையான 1995 ஸ்ரெப்ரெனிகா படுகொலையின் நினைவாக கிழக்கு போஸ்னியாவில் காடுகளின் வழியாக ஒரு புனிதமான அமைதி அணிவகுப்பு நடத்தப்பட்டது. வருடாந்திர 100 கிமீ (62-மைல்) அணிவகுப்பு போஸ்னியாக் இனக்குழுவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களும் சிறுவர்களும் ஈடுபட்டனர். இது முதன்மையாக முஸ்லிம்களால் ஆனது, அவர்கள் போஸ்னிய செர்பியரால் கைப்பற்றப்பட்ட பின்னர் ஸ்ரெப்ரெனிக்காவிலிருந்து தப்பி ஓட முயன்றபோது படுகொலை செய்யப்பட்டனர். ஏற்பாட்டாளர்களின் கூற்றுப்படி, இந்த ஆண்டு அணிவகுப்பில் கிட்டத்தட்ட 4,000 […]

இலங்கை

யாழில் விபத்து! ஒருவர் பலி – பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ9 வீதியின் மீசாலை சந்தியில் நேற்று மாலை இடம் பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து மீசாலையில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டிற்கு செல்வதற்காக பேருந்தில் வந்திறங்கிய குறித்த முதியவர் வீதியை கடக்க முற்பட்ட போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் காயமடைந்துள்ளார். விபத்தையடுத்து மீசாலை சந்தியில் நின்ற முச்சக்கரவண்டி சாரதிகள் காயமடைந்த முதியவரை மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக […]

பொழுதுபோக்கு

மாஸ்.. மாஸ்.. மாஸ்.. ஜவான் படத்திற்கும் விஜய்க்கும் இவ்வளவு நெருங்கிய தொடர்பு

  • July 8, 2023
  • 0 Comments

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்திருக்கும் ஜவான் படத்தின் டிரைலர் ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில், அதனை விஜய் வெளியிட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஷாருக்கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். விஜய் சேதுபதி வில்லனாக மிரட்டி இருக்கும் இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து உள்ளார். ஜவான் திரைப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தான் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந் தேதி திரைக்கு வர உள்ளது. […]

பொழுதுபோக்கு

சிவகார்த்திகேயனின் படத்தில் விஜய் சேதுபதி வசனம் பேசுகிறாரா? அட என்ன சொல்றீங்க

சிவகார்த்திகேயனின் மாவீரன்திரைப்படம் ஜூலை 14 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் வசனம் பேசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இது திரைப்பட தயாரிப்பாளர்களால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மாவீரன்’ படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மடோன் அஷ்வின் இயக்கியுள்ள இப்படம் ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கடந்த வாரம் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், […]

இலங்கை

பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே தேர்தல் வேட்பாளராக அறிவிப்போம் – சாகர!

  • July 8, 2023
  • 0 Comments

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்போம் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். கொழும்பில் இன்று  (8.07 ) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண்பதற்காகவே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம். அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு கட்சி என்ற ரீதியில் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினோம். ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதால் எமது […]

இலங்கை

இலங்கை வந்தடைந்த இந்திய கப்பல்! கரை தட்டிய கப்பலை மீட்டுச் செல்வதில் தாமதம்

பேசாலை நடுக்குடா கடற்கரை பகுதியில் நேற்று கரை தட்டிய கப்பல் மற்றும்  பாஜ்    என அழைக்கப்படும் கொள்கலன் தாங்கி ஆகியவற்றை மீட்டுச் செல்வதற்காக இந்தியாவில் இருந்து கப்பல் ஒன்று இன்று சனிக்கிழமை (8) மாலை பேசாலை நடுக்குடா கடற்கரையை வந்தடைந்துள்ளது. மாலைதீவில் இருந்து இந்தியாவின் தூத்துக்குடி நோக்கி  கொள்கலன் தாங்கியை இழுத்துக்கொண்டு வந்த கப்பல் ஒன்று இயந்திர கோளாறு காரணமாக மன்னார் பேசாலை நடுக்குடா பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (7) மாலை கரை தட்டி உள்ளது. […]

ஐரோப்பா

இது கடுமையான முடிவு :கொத்துக் குண்டுகளை வழங்குவது குறித்து பைடன் கருத்து!

  • July 8, 2023
  • 0 Comments

கொத்துக் குண்டுகளை உக்ரைனிடம் ஒப்படைப்பது “கடினமான முடிவு” என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கொத்துக்குண்டுகளை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் இந்த முடிவை சர்வதேச நாடுகள் எதிர்திருந்தன. இருப்பினும் உக்ரைன் ரஷ்யாவில் குறித்த குண்டுகளை பயன்படுத்தாது என அமெரிக்கா கூறியது. இந்த நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பைடன்,  இது எனது பங்கில் மிகவும் கடினமான முடிவு. மேலும், இதைப் பற்றி நான் எங்கள் கூட்டாளிகளுடன் விவாதித்தேன்”எனத் தெரிவித்துள்ளார். […]

உலகம்

ஈரானில் போலீஸ் நிலையம் மீது தாக்குதல்! 6 பேர் பலி

ஈரானின் தென்கிழக்கில் துப்பாக்கி ஏந்தியவர்கள் மற்றும் தற்கொலைப் படையினர் காவல் நிலையத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் மற்றும் நான்கு தாக்குதல் நடத்தியவர்கள் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. Sistan-Baluchistan மாகாணத்தின் தலைநகரான Zahedan இல் இந்த தாக்குதல் இன்று நடந்துள்ளது. கடந்த ஆண்டு, சரியான ஹிஜாப் அணியாததற்காக ஈரானிய அறநெறிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குர்திஷ் பெண், பொலிசாரின் தாக்குதலின் போது உயிரிழந்தார் என நாடு தழுவிய ரீதியில் போராட்டம் வெடித்தது. […]

error: Content is protected !!