உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகளால் கடத்திச் செல்லப்பட்ட 19,000 சிறுவர்கள்

ரஷ்ய படைகளால் உக்ரைனிலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்து செல்லப்பட்ட 19 ஆயிரம் சிறுவர்களை மீட்டு வர உதவுமாறு கோரிக்கை விடுக்க்பபட்டுள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கா உலக நாடுகளுக்கு இது தொடர்பில் கோரிக்கை வைத்துள்ளார்.
நியூயார்க்கில் நடைபெற்றுவரும் ஐ.நா. மாநாட்டில் உரையாற்றிய ஒலெனா ஜெலன்ஸ்கா, உக்ரைனிலிருந்து கடத்தி செல்லப்பட்ட சிநுவர்களும், பெற்றோரும், உக்ரைன் அரசும் அவர்களை தலைமூழ்கிவிட்டதாக கூறி தாய் நாட்டிற்கு எதிராக அவர்களை ரஷ்ய அதிகாரிகள் மூளை சலவை செய்துவருவதாக குற்றம்சாட்டினார்.
(Visited 15 times, 1 visits today)