இலங்கை

இரண்டு பிள்ளைகளுடன் பிரதேச செயலகத்திற்கு முன்பாக வந்து கதறி அழுத பெண்

இரண்டு பிள்ளைகளையும் வளர்க்க வழியில்லை என 31 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் செவாநகர பிரதேச செயலகத்திற்கு முன்பாக வந்து கதறி அழுத சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

உடவலவ, தனமல்வில வீதி, 8 கன்குவ பிரதேசத்தைச் சேர்ந்த பி.எம்.அனோஜா சமன்மலி என்ற பெண், கணவன் தன்னையும் தனது இரண்டு பிள்ளைகளையும் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதாகக் கூறி கதறி அழுதார்.

அந்த பெண்ணுக்கு 4 மற்றும் ஒன்றரை வயதில் இரு குழந்தைகள் இருக்கின்றனர்.

தனது இரு குழந்தைகளுடன் வாழ்க்கையை முடித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ள அவர், உதவியை நாடக்கூடிய அனைவருக்கும் வருத்தத்தைத் தெரிவித்தார்.

கணவன் தன்னை துரத்திவிட்டு வேறு பெண்ணுடன் வாழ்வதாக பொலிசில் புகார் அளித்தாலும் பலனில்லை என்றும், குடியிருக்க இடம் கிடைத்தால் கூலி வேலை செய்து வாழலாம் என்றும் கூறினார்.

இரண்டு பிள்ளைகளையும் நன்னடத்தையில் ஒப்படைக்குமாறு பிரதேச செயலக அதிகாரிகள் கூறியதாகவும், இரண்டு பிள்ளைகள் இல்லாமல் தன்னால் வாழ முடியாது எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் செவநகர பிரதேச செயலாளர் நயனஜித் பிரியசாந்தவிடம் நடத்திய விசாரணையில், தனக்கு காணியை வழங்க முடியும் எனவும், அதற்காக காணி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து காணி வழங்க ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்.

இந்த தாய்க்கு உதவக்கூடிய நன்கொடையாளர்கள் இருப்பின் செவனகல பிரதேச செயலாளருடன் அல்லது 0773855587 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content