இலங்கை செய்தி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள விசேட கோரிக்கை

எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று மீண்டும் அழைப்பு விடுத்தார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தற்போதாவது ஒன்றிணையுங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் இன்று முன்வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

வேறு விடயங்கள் தொடர்பில் முரண்பாடுகள் இருந்தாலும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும், சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கும் எதிரணிகள் ஒன்றுபட வேண்டும். – எனவும் ஜனாதிபதி கூறினார்.

அதேவேளை, நல்லாட்சியைப் பொறுத்தமட்டில், சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் ஊழல்களை மதிப்பிடுவதற்கான அறிக்கையை தயாரித்து வருகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனங்களுக்கு ஏற்ப ஊழலுக்கு எதிரான சட்டம் உருவாக்கப்படுவதோடு, புதிய அரச நிதி முகாமை சட்டம் வரைவு செய்யப்படும். வரிச்சலுகைகள், வரி இடைவெளி மற்றும் பெரிய அளவிலான அரச கொள்முதல் ஒப்பந்தங்களைக் கொண்டிருக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலை பகிரங்கப்படுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம், நாட்டில் வெளிப்படைத் தன்மையை அதிகரிப்பது மற்றும் ஊழலைத் தடுப்பதே நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி கூறினார்.

(Visited 5 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!