சிகிச்சைக்கு பணம் இல்லாததால் பிள்ளைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு – இலங்கையில் நடந்த சோகம்
![](https://iftamil.com/wp-content/uploads/2023/04/75.jpg)
கெபிதிகொல்லாவ, கனுகஹவெவ பிரதேசத்தில் உள்ள தாயொருவர், தனது இரு அங்கவீனமான மகன்களுடன் இன்று (05) தற்கொலை செய்யும் நோக்கில் கிணற்றில் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், தாயுடன் மற்றையவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் கபிதிகொல்லேவ கனுகஹவெவ பிரதேசத்தைச் சேர்ந்த சுனில் சாந்தகே ரவிது மிஹிரங்க என்ற இருபத்தொரு வயதுடைய இளைஞர் ஆவார். உயிரிழந்த இளைஞனின் 48 வயதுடைய தாயும் ஒன்பது வயது குழந்தையும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த இருபத்தொரு வயதுடைய ரவிந்து மிஹிரங்க முற்றாக ஊனமுற்றவர் எனவும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது சகோதரர் காது கேளாதவராகவும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாற்றுத்திறனாளி குழந்தைகள் இருவருக்கு சிகிச்சை அளிக்க பணம் இல்லாத காரணத்தால் குறித்த பெண் இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிவில் பாதுகாப்புப் படை வீரரான குழந்தைகளின் தந்தை இன்று (05) அதிகாலை வேலைக்குச் சென்றுவிட்டு காலை 10 மணியளவில் வீடு திரும்பினார்.
மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை வீட்டில் காணாததால், சுற்றும் முற்றும் பார்த்தபோது மனைவியைக் கண்டார். மேலும் இரண்டு குழந்தைகள் கிணற்றில் கிடந்தனர்.இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.