Site icon Tamil News

மேற்கு ஜெர்மனியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இருவர் பலி!

மேற்கு ஜேர்மனியின் கொலோன் நகருக்கு அருகே இடம்பெற்ற ரயில் விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹுர்த் நகருக்கு அருகில் தண்டவாளத்தில் வேலை செய்து கொண்டிருந்த மக்கள் மீது ரயில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவசரகால பணியாளர்கள், பொலிஸார் மற்றும் உளவியலாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளதுடன், ரயில் போக்குவரத்திற்கான பாதை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த விபத்து காரணமாக ஐந்துபேர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version