இலங்கை

இலங்கையில் ரயில் சேவைகள் தாமதமாகலாம் : பயணிகளுக்கு விசேட அறிவிப்பு!

ரம்புக்கனையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் பாணந்துறை நோக்கி பயணிக்கும் விரைவு புகையிரதமானது பொத்தளை நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளது.

இதன் காரணமாக பிரதான பாதையில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி விஜய ராஜதஹன நிலையத்தில் இருந்து காலை 7.14 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் 45 நிமிடங்கள் தாமதமாfகியுள்ளது.

அத்துடன் கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை, காலி மற்றும் மாத்தறைக்கு இயக்கப்படும் விரைவு ரயில் சுமார் 47 நிமிடங்கள் தாமதமாகும். மீரிகம புகையிரத நிலையத்தில் இருந்து காலை 7.52 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பொல்கஹவெல சந்தியில் இருந்து கொழும்பு கோட்டைக்கு செல்லும் விரைவு ரயில் 46 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. மீரிகம புகையிரத நிலையத்தில் இருந்து காலை 7.52 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மகாநுவரயிலிருந்து கொழும்பு கோட்டை, காலி மற்றும் மாத்தறை வரை செல்லும் அதிவேக ரயில்கள் மீரிகம புகையிரத நிலையத்தில் இன்று நிறுத்தப்படும் என்றும் பொல்கஹவெல சந்தியில் இருந்து கொழும்பு கோட்டை வரை செல்லும் ரயில்கள் 45 நிமிடங்கள் தாமதமாக செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!