உலகம் செய்தி

ஈரானுக்கு ஆதரவாக களமிறங்க தயாராகும் ஹூதிகள்!

  • March 26, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரானுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக யேமன் நாட்டின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் Houthis, தெரிவித்துள்ளனர். தகுந்த நேரத்தில் ராணுவ ரீதியாகக் களமிறங்க தாங்கள் முழு வீச்சுடன் காத்திருப்பதாக ஹூதி அமைப்பின் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஈரான் தற்போதைய மோதல்களில் பின்னடைவைச் சந்தித்தால் மட்டுமே, தாங்கள் நேரடியாகத் தலையிட வேண்டிய அவசியம் ஏற்படும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய கப்பல் போக்குவரத்து மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு […]

இலங்கை செய்தி

ஐ.நா. பிரதிநிதியுடன் தமிழ்த் தேசிய பேரவையினர் சந்திப்பு!

  • March 26, 2026
  • 0 Comments

இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி மார்க் அண்ட்ரே பிரான்ச் மற்றும் தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. கடந்த ஒரு வாரகாலமாக வடக்கு மாகாணத்தில் தங்கியிருந்து பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புகளை மேற்கொண்டு வரும் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி, இன்று காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை தமிழ்த் தேசியப் பேரவையின் உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். யாழ்ப்பாணம் – தாவடிப் பகுதியில் அமைந்துள்ள ‘பொக்ஸ்’ […]

இலங்கை செய்தி

சமஷ்டியே தமிழர்களின் கோரிக்கை: கனடா தூதுவரிடம் சாணக்கியன் எடுத்துரைப்பு!

  • March 26, 2026
  • 0 Comments

இலங்கையின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வாக சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி அமைப்பும், உண்மையான அதிகாரப் பங்கீடும் அவசியம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்டினை தனிப்பட்ட முறையில் சந்தித்து மேற்கொண்ட விரிவான கலந்துரையாடலின் போதே அவர் இதனை வலியுறுத்தினார். இந்தச் சந்திப்பின் போது, இலங்கையில் தமிழ் மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து சாணக்கியன் விரிவாக எடுத்துரைத்தார். குறிப்பாக, வலிந்து காணாமல் […]

இலங்கை செய்தி

சுற்றுலாத்துறை மேம்பாடு குறித்து விசேட கலந்துரையாடல்!

  • March 26, 2026
  • 0 Comments

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணி, அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (26) முற்பகல் கூடியது. தற்போதைய உலகளாவிய வலுசக்தி நெருக்கடிக்கு மத்தியில் இந்நாட்டின் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டன. சுற்றுலாத்துறையில் உள்ளவர்களுக்கு தடையின்றி எரிபொருளை வழங்குவது மற்றும் தொழில்துறையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான ஆதரவை வழங்கும் திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வருகை, ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் […]

உலகம் செய்தி

ஈரான்மீதான போர்: ட்ரம்பின் அணுகுமுறை குறித்து ஜேர்மன் அதிருப்தி!

  • March 26, 2026
  • 0 Comments

ஈரான்மீதான போர் தொடர்பில் அமெரிக்காவின் முரண்பாடான நிலைப்பாடுகள் தொடர்பில் ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் Boris Pistorius கடும் விமர்சனம் முன்வைத்துள்ளார். ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அமெரிக்கா தனது ஐரோப்பிய நட்பு நாடுகளை கோழைகள் என்று வர்ணிப்பதையும், முன்னுக்குப் பின் முரணான கோரிக்கைகளை முன்வைப்பதையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். அத்துடன், முறையான போர்நிறுத்தம் ஏற்படும் வரை ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஜேர்மனி தலையிடாது என்று […]

உலகம் செய்தி

ஈரானை இயக்கும் புடின்: பிரித்தானியா எச்சரிக்கை!

  • March 26, 2026
  • 0 Comments

ரஷ்யாவுக்கும், ஈரானுக்கும் இடையே ஆபத்தான ராணுவ உறவு குறித்து பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் John Healey எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய கிழக்கில் போர் ஏற்படுவதற்கு முன்னதாகவே, ரஷ்யா தனது புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டதுடன் ஈரானுக்குப் பயிற்சியும் அளித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த இரு நாடுகளும் இணைந்து ஒரு “ஆக்கிரமிப்பு அச்சாக” உருவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் செயல்பாடுகளுக்குப் பின்னால் விளாடிமிர் புடினின் மறைமுகக் கரங்கள் இருப்பதாக அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இலங்கை

வைத்தியசாலையில் இருந்து மீண்டும் CID சென்றார் சுரேஷ் சாலே!

  • March 26, 2026
  • 0 Comments

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே Major General Suresh Saleh மீண்டும் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு CID அழைத்துவரப்பட்டுள்ளார். திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். உரிய மருத்துவ சிகிச்சைகள் முடிவடைந்த பின்னர் அவர் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சுரேஷ் சாலே, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், 90 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது […]

உலகம் செய்தி

துருக்கியால் இயக்கப்படும் எரிபொருள் கப்பல்மீது ட்ரோன் தாக்குதல்!

  • March 26, 2026
  • 0 Comments

கருங்கடலில் பயணித்துக்கொண்டிருந்த துருக்கியால் இயக்கப்படும் கச்சா எண்ணெய் கப்பல் மீது இன்று ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. Sierra Leonne நாட்டின் கொடியுடன் பயணித்த இந்த கப்பலில் 27 துருக்கி மாலுமிகள் இருந்த போதிலும், அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ரஷ்யாவின் Novorossiysk துறைமுகத்திலிருந்து சுமார் பத்து லட்சம் பேரல் எண்ணெயுடன் புறப்பட்ட இந்த கப்பல் Turkish firm Besiktas நிறுவனத்திற்கு சொந்தமானது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி போக்குவரத்து அமைச்சகம் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்திய நிலையில், […]

அரசியல் இலங்கை செய்தி

“சுரேஷ் சாலே வைத்தியசாலையில்”-புலி புராணம் பாடுகிறது மஹிந்த அணி!

  • March 26, 2026
  • 0 Comments

“பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு பங்களிப்பை வழங்கியவரே சுரேஷ் சாலே.அவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்து தடுத்து வைத்திருப்பதை தேசத்துரோக நடவடிக்கையாகவே கருதுகின்றோம்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சி உறுப்பினரான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர Sarath Weerasekara தெரிவித்தார். அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கொழும்பில் இன்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். […]

பொழுதுபோக்கு

கார் விபத்தில் நடிகை பலி!

  • March 26, 2026
  • 0 Comments

நடிகையும், மாடலுமான ஹர்ஷில் காலியா Harshil Kalia (வயது – 30) கார் விபத்தில் பலியாகியுள்ளார். ராஜஸ்தானைச் சேர்ந்த இவர் ‘க்ரைம் நெக்ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்துள்ளார். அத்துடன், இசை வீடியோக்களிலும் தோன்றியுள்ளார். சமூக ஊடகங்களில் கணிசமான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள இவர், நேற்று முன் தினம் படப்பிடிப்பை முடித்துவிட்டு நள்ளிரவில் ஜெய்ப்பூரில் உள்ள தனது வீட்டுக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தார். இதன்போது கார் தடுப்புச் சுவரில் மோதி, திடீரென கவிழ்ந்தது. இதில் ஹர்ஷில் காலியா, […]

error: Content is protected !!