இலங்கை செய்தி

T-20 உலகக்கிண்ணம்: இலங்கையில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்!

  • February 13, 2026
  • 0 Comments

இலங்கையில் நடைபெறும் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளை பாதுகாப்பாகவும், வெற்றிகரமாகவும் நடத்துவதற்கான முழுமையான பாதுகாப்பு கட்டமைப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது. விசேட அறிக்கையொன்றை விடுத்து பாதுகாப்பு அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. குறித்த போட்டி தொடரின் சர்வதேச முக்கியத்துவத்தையும், உலகம் முழுவதிலிருந்து வரும் கிரிக்கெட் வீரர்கள், அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பெருமளவிலான பார்வையாளர்களை கருத்தில் கொண்டு இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு, இலங்கை பொலிஸ், முப்படைகள், புலனாய்வு நிறுவனங்கள் மற்றும் பிற முக்கிய பங்குதாரர்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த பாதுகாப்பு […]

இந்தியா

அரியணையேறுகிறார் தாரிக் ரஹ்மான்: பிரதமர் மோடி வாழ்த்து!

  • February 13, 2026
  • 0 Comments

பங்களாதேஷில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பி.என்.பி. Bangladesh Nationalist Party (BNP) தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், பிரதமராக பதவியேற்கவுள்ள தாரிக் ரஹ்மானுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். பங்களாதேஷில் நேற்று நடைபெற்ற 13வது பொதுத்தேர்தல் நேற்று நடைபெற்றது. சுமார் 17 ஆண்டுகால வெளிநாட்டு வாழ்க்கைக்குப் பிறகு நாடு திரும்பிய தாரிக் ரஹ்மான் Tarique Rahman தலைமையிலான BNP கூட்டணி மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்றுள்ளது. தாரிக் ரஹ்மான் , பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் மறைந்த கலீதா […]

செய்தி

பிரேரணையைக் கிழித்தெறிந்து ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் வெளிநடப்பு!

  • February 13, 2026
  • 0 Comments

யாழ்.மாநகரசபையின் Jaffna Municipal Council இன்றைய அமர்வின்போது ஈ.பி.டி.பி. E.P.D.P. உறுப்பினர்கள் பிரேரணையைக் கிழித்தெறிந்து சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர். அப்பிள் கடை வியாபாரிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தை தொடர்ந்தே ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் இவ்வாறு செயல்பட்டனர். இன்றைய சபை அமர்வின் போது இவ்விடயம் குறித்துக் கருத்து வெளியிட்ட ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள், முறையான மாற்றுத் திட்டம் அல்லது பொறிமுறை இன்றி இவ்வாறான பிரேரணைகளைக் கொண்டுவரக் கூடாது என வலியுறுத்தினர். பாதிக்கப்பட்ட வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் […]

இலங்கை செய்தி

யாழ். மாநகரசபைக்கு முன்பாக போராட்டம் முன்னெடுப்பு!

  • February 13, 2026
  • 0 Comments

யாழ். நகர அப்பிள் apple கடை வியாபாரிகள் இன்று மாநகர சபை நுழைவாயிலுக்கு முன்பாக கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். யாழ். மத்திய பஸ் நிலையச் சூழலில் அமைந்துள்ள அப்பிள் கடைகளை அகற்றுவது தொடர்பாக மாநகர சபை உறுப்பினர் ப. தர்சானந்தினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். நகரில் அமைந்துள்ள அப்பிள் கடைகளின் செயற்பாடுகள் தொடர்பாக உறுப்பினர் ப.தர்சானந்த் சபையில் முன்வைத்த பிரேரணையினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட […]

இலங்கை செய்தி

கறுப்பு கொடி பறக்கவிடுவது தவறு கிடையாது: யாழ்.பல்கலை மாணவர்களுக்காக சுரேஷ் களத்தில்!

  • February 13, 2026
  • 0 Comments

“யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கறுப்புக்கொடி போராட்டத்தை சட்டவிரோதமானது என்ற பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவின் கருத்து பிழையானது.” இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ்  பிரேமச்சந்திரன் Suresh  Premachandran தெரிவித்துள்ளார். போராட்டத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து அதனைத்தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும் எனவும் விசேட அறிக்கையொன்றின் ஊடாக அவர் வலியுறுத்தியுள்ளார். “இலங்கை என்பது சிங்கள, தமிழ் இராசதானிகளாக பிளவுபட்டு இருந்ததென்பதும் 1883ஆம் ஆண்டு காலனித்துவ ஆட்சியாளர்களான பிரித்தானியர்களால் தமது நிர்வாக வசதிக்காக ஒன்றாக்கப்பட்டது என்பதுதான் வரலாறு. ஒன்றிணைத்த இராசதானிகளை சிலோன் […]

விளையாட்டு

சிம்பாப்வேயிடம் மண்டியிட்டது ஆஸ்திரேலியா!

  • February 13, 2026
  • 0 Comments

கிரிக்கெட் உலகில் பலம்பொருந்திய அணியாகக் கருதப்படும் ஆஸ்திரேலியாவை Australia சிம்பாப்வே Zimbabwe அணி தோற்கடித்துள்ளது. T20 உலக்கிண்ண தொடரில் 19 ஆவது லீக் ஆட்டம் கொழும்பு ஆர். பிரேமதாச Colombo (RPS) மைதானத்தில் இன்று முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமானது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தெரிவுசெய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது. Brian Bennett ஆட்டமிழக்காது 64 ஓட்டங்களைப் […]

பொழுதுபோக்கு

உயிருள்ளவரை உஷா முதல் காதலர் தினம்வரை…!

  • February 13, 2026
  • 0 Comments

உலகெங்கிலும் காதலர் தினம் நாளை (14) கொண்டாடப்படுகின்றது. காதலர் தினத்தை இலக்கு வைத்து சில காதல் படங்கள் வெளியாகியுள்ளன. மேலும் சில காதல் படங்கள் ரீ ரிலீஸ் ஆகியுள்ளன. நடிகர் டி. ராஜேந்தர் இயக்கி நாயகனாக நடித்த “உயிருள்ளவரை உஷா” திரைப்படம் 43 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ரீரிலீஸ் ஆகியது. 1983 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்திற்கு, டி. ராஜேந்தரே இசையமைத்திருந்தார். அதுபோல கௌதம் மேனன் இயக்கிய மாதவனின் மின்னலே, […]

இந்தியா தமிழ்நாடு

ஆளுநராகிறார் ஓ.பி.எஸ்? புது வியூகம் வகுக்கிறது பா.ஜ.க.!

  • February 13, 2026
  • 0 Comments

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், O. Panneerselvam (OPS) விரைவில் ஆளுநராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ.க.வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்துவதில் பா.ஜ.க. BJP தீவிரம் காட்டிவருகின்றது. பல பகுதிகளில் வெற்றிநடை போட்டாலும் தமிழகத்தில் கால் பதிப்பதென்பது பா.ஜ.கவுக்கு தொடர்ந்து எட்டாக் கனியாகவே இருந்துவருகின்றது. எனவே, அ.தி.மு.க. தலைவர்களை ஒன்றிணைத்தால் மட்டுமே தி.மு.கவை வெல்ல முடியும் என பா.ஜ.க. […]

இந்தியா

விமான விபத்து குறித்து இத்தாலி ஊடகம் சர்ச்சை செய்தி: இந்தியா மறுப்பு!

  • February 13, 2026
  • 0 Comments

அகமதாபாத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானமை தொடர்பில் இத்தாலி ஊடகமொன்று வெளியிட்ட செய்திக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. “விசாரணை முடிவடையாத நிலையில், ஆதாரமற்ற தகவல்கள் பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தும்” என்று இந்திய விமான விபத்து புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. மேற்படி விமான விபத்து தொடர்பில் இத்தாலியின் கோரியர் டெல்லா செரா என்ற நாளிதழ் பரபரப்பு செய்தியை வெளியிட்டிருந்தது. இந்த விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறால் ஏற்படவில்லை என்றும், விமானி […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பு: பிரிட்டன் 2ஆவது இடத்தில்!

  • February 13, 2026
  • 0 Comments

இலங்கைக்கு 2026 ஜனவரி 01 முதல் பெப்ரவரி 08 வரையான காலப்பகுதிக்குள் 3 லட்சத்து 58 ஆயிரத்து 103 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி காலப்பகுதிக்குள் இந்தியாவில் இருந்து 64 ஆயிரத்து 500 பேரும், பிரிட்டனில் இருந்து 38 ஆயிரத்து 823 பேரும், ரஷ்யாவில் இருந்து 34 ஆயிரத்து 80 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர். ஜேர்மனியில் இருந்து 23 ஆயிரத்து 177 பேரும், […]

error: Content is protected !!