உலகம் செய்தி

ஈரானுக்கு மேலும் 10 நாட்கள் கெடு!

  • March 27, 2026
  • 0 Comments

ஈரானின் எரிசக்தி நிலையங்கள்மீதான தாக்குதல்களை 10 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தெரிவித்தார். ஈரான் அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, ஏப்ரல் 6, வரை இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடைபெற்று வருவதாகவும், அமெரிக்கா ஏற்கனவே இந்தப் போரில் வெற்றி பெற்றுவிட்டதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். எனினும், ஈரான் ஒரு உடன்படிக்கைக்கு வரவில்லை என்றால் மீண்டும் தாக்குதல்கள் தொடரும் என அவர் […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு உண்மையான நண்பனாக ரஷ்யா துணை நிற்கும்: அந்நாட்டு பிரதி அமைச்சர் உறுதி!

  • March 26, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக ஏற்படக்கூடிய எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள இலங்கைக்கு ஆதரவளிக்க ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர் Roman Marshavin தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர், இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்த போதே இதனைத் தெரிவித்தார். தற்போது ஏற்பட்டுள்ள உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை எதிர்கொள்ள வேண்டியுள்ள சவால்கள் குறித்து ரஷ்யாவிற்கு புரிதல் இருப்பதாக […]

இலங்கை செய்தி

தேசிய நாமல் உயன ‘இலங்கையின் தேசிய மரபுரிமையாக’ பிரகடனம்!

  • March 26, 2026
  • 0 Comments

தேசிய நாமல் உயனவை ‘இலங்கையின் தேசிய மரபுரிமையாக’ பிரகடனப்படுத்தும் நிகழ்வும், அதன் 35 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. அநுராதபுர மாவட்டத்தின் பலாகல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 602 ஹெக்டெயார் பரப்பளவைக் கொண்ட தேசிய நாமல் உயன, தேசிய, சமய, சுற்றுச்சூழல் மற்றும் புவியியல் ரீதியாகப் பல பெறுமதிகளைக் கொண்ட ஒரு தனித்துவமான இடமாகும். இதன் நிறுவனர் வண, வனவாசி ராகுல […]

உலகம் செய்தி

ஈரானுக்கு ஆதரவாக களமிறங்க தயாராகும் ஹூதிகள்!

  • March 26, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரானுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக யேமன் நாட்டின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் Houthis, தெரிவித்துள்ளனர். தகுந்த நேரத்தில் ராணுவ ரீதியாகக் களமிறங்க தாங்கள் முழு வீச்சுடன் காத்திருப்பதாக ஹூதி அமைப்பின் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஈரான் தற்போதைய மோதல்களில் பின்னடைவைச் சந்தித்தால் மட்டுமே, தாங்கள் நேரடியாகத் தலையிட வேண்டிய அவசியம் ஏற்படும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய கப்பல் போக்குவரத்து மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு […]

இலங்கை செய்தி

ஐ.நா. பிரதிநிதியுடன் தமிழ்த் தேசிய பேரவையினர் சந்திப்பு!

  • March 26, 2026
  • 0 Comments

இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி மார்க் அண்ட்ரே பிரான்ச் மற்றும் தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. கடந்த ஒரு வாரகாலமாக வடக்கு மாகாணத்தில் தங்கியிருந்து பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புகளை மேற்கொண்டு வரும் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி, இன்று காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை தமிழ்த் தேசியப் பேரவையின் உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். யாழ்ப்பாணம் – தாவடிப் பகுதியில் அமைந்துள்ள ‘பொக்ஸ்’ […]

இலங்கை செய்தி

சமஷ்டியே தமிழர்களின் கோரிக்கை: கனடா தூதுவரிடம் சாணக்கியன் எடுத்துரைப்பு!

  • March 26, 2026
  • 0 Comments

இலங்கையின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வாக சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி அமைப்பும், உண்மையான அதிகாரப் பங்கீடும் அவசியம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்டினை தனிப்பட்ட முறையில் சந்தித்து மேற்கொண்ட விரிவான கலந்துரையாடலின் போதே அவர் இதனை வலியுறுத்தினார். இந்தச் சந்திப்பின் போது, இலங்கையில் தமிழ் மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து சாணக்கியன் விரிவாக எடுத்துரைத்தார். குறிப்பாக, வலிந்து காணாமல் […]

இலங்கை செய்தி

சுற்றுலாத்துறை மேம்பாடு குறித்து விசேட கலந்துரையாடல்!

  • March 26, 2026
  • 0 Comments

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணி, அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (26) முற்பகல் கூடியது. தற்போதைய உலகளாவிய வலுசக்தி நெருக்கடிக்கு மத்தியில் இந்நாட்டின் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டன. சுற்றுலாத்துறையில் உள்ளவர்களுக்கு தடையின்றி எரிபொருளை வழங்குவது மற்றும் தொழில்துறையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான ஆதரவை வழங்கும் திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வருகை, ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் […]

உலகம் செய்தி

ஈரான்மீதான போர்: ட்ரம்பின் அணுகுமுறை குறித்து ஜேர்மன் அதிருப்தி!

  • March 26, 2026
  • 0 Comments

ஈரான்மீதான போர் தொடர்பில் அமெரிக்காவின் முரண்பாடான நிலைப்பாடுகள் தொடர்பில் ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் Boris Pistorius கடும் விமர்சனம் முன்வைத்துள்ளார். ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அமெரிக்கா தனது ஐரோப்பிய நட்பு நாடுகளை கோழைகள் என்று வர்ணிப்பதையும், முன்னுக்குப் பின் முரணான கோரிக்கைகளை முன்வைப்பதையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். அத்துடன், முறையான போர்நிறுத்தம் ஏற்படும் வரை ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஜேர்மனி தலையிடாது என்று […]

உலகம் செய்தி

ஈரானை இயக்கும் புடின்: பிரித்தானியா எச்சரிக்கை!

  • March 26, 2026
  • 0 Comments

ரஷ்யாவுக்கும், ஈரானுக்கும் இடையே ஆபத்தான ராணுவ உறவு குறித்து பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் John Healey எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய கிழக்கில் போர் ஏற்படுவதற்கு முன்னதாகவே, ரஷ்யா தனது புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டதுடன் ஈரானுக்குப் பயிற்சியும் அளித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த இரு நாடுகளும் இணைந்து ஒரு “ஆக்கிரமிப்பு அச்சாக” உருவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் செயல்பாடுகளுக்குப் பின்னால் விளாடிமிர் புடினின் மறைமுகக் கரங்கள் இருப்பதாக அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இலங்கை

வைத்தியசாலையில் இருந்து மீண்டும் CID சென்றார் சுரேஷ் சாலே!

  • March 26, 2026
  • 0 Comments

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே Major General Suresh Saleh மீண்டும் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு CID அழைத்துவரப்பட்டுள்ளார். திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். உரிய மருத்துவ சிகிச்சைகள் முடிவடைந்த பின்னர் அவர் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சுரேஷ் சாலே, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், 90 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது […]

error: Content is protected !!