தொலைபேசி அழைப்பை நிராகரிக்கும் அநுர: கடும் கவலையில் மனோ!
ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்னர் தனது தொலைபேசி அழைப்புகளுக்கு அநுரகுமார திஸாநாயக்க பதிலளிப்பதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் TPA தலைவர் மனோ கணேசன் Mano Ganesan கவலை வெளியிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார். இது தொடர்பில் மனோ கணேசன் Mano Ganesan கூறியவை வருமாறு, “மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையின்கீழ் நடத்துவதற்குரிய யோசனைக்கு நாம் ஆதரவளித்தோம். எதிரணியில் இருக்கும்போது தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் அதற்கு ஆதரவளித்தார். […]













