இலங்கை

நேபாள பூகம்பத்தில் இலங்கையர்களுக்கு பாதிப்பா – தூதரகம் வெளியிட்ட தகவல்

நேபாளத்தில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள பூகம்பம் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என காத்மண்டுவிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையர்கள் பூகம்பம் மையம்கொண்டிருந்த பகுதியிலிருந்து வெகுதொலைவிலேயே வாழ்கின்றனர் என தூதரகம் தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் தற்போது சுமார் 100 இலங்கையர்கள் வசிக்கின்றனர் இவர்களில் 40 மாணவர்கள் பொக்காராவிலும் பத்துபேர் காத்மண்டுவிலும் வாழ்கின்றனர் என தூதரகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச அமைப்புகள் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் காத்மண்டுவிலேயே வாழ்கின்றனர் என தெரிவித்துள்ளது.

வருடாந்தம் பெருமளவு இலங்கையர்கள் நேபாளத்திற்கு சுற்றுலா செல்வது வழமை இவர்கள் சில நாட்கள் லும்பினியில் தங்கியிருப்பார்கள் எனவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!