ஆசியா

சிங்கப்பூரில் அதிர்ச்சி – தாயுடன் இறந்து கிடந்த கைக்குழந்தை – ஒரு மாதத்தில் 2வது சம்பவம்

சிங்கப்பூரில் தாயுடன் கைக்குழந்தை குழந்தை ஒன்றின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பிளாக் 29 கிம் மோ லிங்கில் 34 வயது பெண் மற்றும் மூன்று வாரங்களே ஆன கைக்குழந்தை ஒன்றும் இறந்த நிலையில் கிடந்தனர்.

3 ஆம் திகதி காலை 11.15 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிளாக் அடிவாரத்தில் பெண்ணும் குழந்தையும் அசைவின்றி கிடந்தனர். இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்ததாக தெரியவந்துள்ளத.

இவர்கள் இருவரும், தாய் மற்றும் மகன் என்று நம்பப்படுவதாக Lianhe Zaobao தெரிவித்தது. முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இதில் எந்த சதிச்செயலும் நடந்ததாக போலீசார் சந்தேகிக்கவில்லை.

விசாரணைகள் நடந்து வருகின்றன. இதேபோல, கடந்த மாதம் 5 ஆம் திகதி, யூனோஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கீழே 33 வயதான பெண் மற்றும் ஒரு மாத கைக் குழந்தை இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது.

(Visited 5 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content