ஆசியா

ஈரானை வாட்டி வதைக்கும் வெப்பம் – மக்களை வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

ஈரானில் திடீரென்று அதிகரித்த கடும் வெப்பம் காரணமாக ஈரான் நாட்டில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் முதியவர்கள், நோய் பாதிப்பு உள்ளவர்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

ஈரான் நாட்டில் கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட அதீத வெப்பம் பதிவாகி வருகிறது. தெற்கு ஈரானில் பல நகரங்களில் தீயை உமிழ்வது போல வெயில் வாட்டி வதைக்கிறது.

தெற்கு ஈரானில் உள்ள ஆவஸ் நகரில் அதிகபட்சமாக 51 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எதிர்பாராத வகையில் திடீரென்று அதீத அளவில் வெயில் கொளுத்துவதால் அசம்பாவிதங்களை தவிர்க்க ஈரான் அரசு 2 நாட்கள் பொது விடுமுறை அறிவித்தது.

இந்நிலையில் முதியவர்கள், நோய் பாதிப்புள்ளவர்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று ஈரான் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அத்யாவசிய தேவை இருந்தால் மட்டும் வெளியே வருமாறு அறிவுறுத்தியுள்ளது. உலகளவில் பல்வேறு நாடுகளில் அதீத வெப்ப அலையும், அதே வேளையில் பல நாடுகளில் வழக்கத்திற்கு மாறாக கடும் மழையும் கொட்டி வருகிறது. காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு மனித செயற்பாடுகளே காரணம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

(Visited 15 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!