Site icon Tamil News

ருவாண்டா ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடிய ரணில்!

மூன்றாவது சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக உத்தியோகபூர்வ அழைப்பில் லண்டன் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அங்கு ருவண்டா ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது  இரு நாடுகளுக்கும் இடையி லான விவசாயம்,  சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் தலைவர்கள் கவனம் செலுத்தியதுடன்,  இயற்கை அனர்த்தங்களுக்கு துரித நடவடிக்கை எடுப்பது தொடர்பில் பயிற்சி அளிக்க இலங்கை பாதுகாப்புப் படைகளின் ஒத்துழைப்பை வழங்குவதற்கு ஜனாதிபதி விக்ரமசிங்க உடன்பாடு தெரிவித்தார்.

Exit mobile version