மத்திய கிழக்கு

அனைத்துலக நீதிமன்றத் தீர்ப்பைப் புறக்கணித்து ராஃபா மீது தாக்குதல்கள் தொடர்ந்த இஸ்‌ரேல்

ராஃபா மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று அனைத்துலக நீதிமன்றம் மே 24ம் திகதி தீர்ப்பளித்தும் பலனில்லாமல் போனது.தீர்ப்பைப் புறக்கணித்து இன்று( 25) இஸ்‌ரேல், ராஃபா மீதான தாக்குதல்களைத் தொடர்ந்தது.

காஸாவின் வடக்குப் பகுதியில் மூன்று பிணைக்கைதிகளின் சடலங்களை மீட்டதாக இஸ்‌ரேலிய ராணுவம் தகவல் வெளியிட்டதைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்திருக்கும் பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று அனைத்துலக நீதிமன்றம் வலியுறுத்தியது.

பாலஸ்தீன அகதிகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள் சென்றடைய எகிப்துக்கும் காஸாவுக்கும் இடையிலான இணைப்பைத் திறந்துவைத்திருக்கும்படி இஸ்‌ரேலுக்கு அனைத்துலக நீதிமன்றம் உத்தரவிட்டது.இம்மாதத் தொடக்கத்தில் ராஃபா மீது தாக்குதல் நடத்த தொடங்கியபோது இஸ்‌ரேல் அந்த இணைப்புப் பாதையை மூடியது.

Israel reacts to ICJ order with fury, but others hail ‘groundbreaking’ move

அனைத்துலக நீதிமன்றம் எடுத்துள்ள முடிவு தவறானது என்று தெரிவித்த இஸ்‌ரேல், ராஃபா மீதான தாக்குதலை நிறுத்தப்போவதில்லை என்று இஸ்ரேல் தெரிவித்தது.ஹமாஸ் போராளிகள் ராஃபாவில் பதுங்கியிருப்பதாகவும் அவர்களை வேரோடு அழித்தால் மட்டுமே இஸ்‌ரேல்-பாலஸ்தீனம் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்றும் அது தெரிவித்தது.

ஆனால், ராஃபாவில் மில்லியன்கணக்கான பாலஸ்தீன அகதிகள் இருப்பதாகவும் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டால் உயிர்ச் சேதம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் என்றும் உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.

போர் நிறுத்த பேச்சுவார்த்தையைத் தொடர வேண்டும் என்ற இலக்குடன் ராஃபா மீதான தாக்குதலை நிறுத்திவைக்க இஸ்‌ரேலுக்கு அனைத்துலக நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால், தீர்ப்பை நேரடியாக அமல்படுத்தும் அதிகாரம் அனைத்துலக நீதிமன்றத்துக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.

You cannot copy content of this page

Skip to content