ஈரானால் இன்னும் 04 மாதங்களுக்கு ஈடுகொடுக்க முடியும்!
ஈரானால் இன்னும் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு அமெரிக்காவின் முற்றுகையை தாங்கிக்கொள்ள முடியும் என புதிய பகுப்பாய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
ஈரான் போர் தொடர்பில் வெளியாகியுள்ள இரகசிய அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில், மிதக்கும் டேங்கர்களில் எண்ணெயைச் சேமித்து வைப்பது, எண்ணெய் வயல் ஓட்டங்களை நிர்வகிப்பது, மற்றும் தரைவழிப் பாதைகள் மூலம் எண்ணெயைக் கடத்துவது ஆகியவற்றிலிருந்து ஈரானின் இந்தத் தாக்குப்பிடிக்கும் திறன் உருவாகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மதிப்பீடு, சீனாவுக்கு வழங்குவதற்காக ஈரானிடம் சுமார் 120 நாட்களுக்கு கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளது என்று கூறும் முந்தைய அறிக்கைகளுடன் ஒத்துப்போகிறது.
ஈரானுக்கு தாக்குப்பிடிக்கும் திறன் உள்ளபோதிலும், அமெரிக்காவின் இந்த முற்றுகை பொருளாதாரத்தை அதல பாதாளத்திற்கு தள்ளியுள்ளது.
ஈரான் தினமும் 500 மில்லியன் டொலர்களை இழப்பதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகிறார்.




