Site icon Tamil News

கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

கொழும்பின் பல பகுதிகளில் இன்று நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

10 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு இன்று இரவு 07.00 மணி முதல் நாளை அதிகாலை 05.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும்.

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக குறித்த நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

நீர் வெட்டு காரணமாக பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Exit mobile version