இலங்கை

நிகழ்ச்சி நிரல் குறித்து எனக்குத் தெரியாது – எஸ்.எம். சந்திரசேன

இன்று மதியம் நடைபெறவுள்ள அனைத்துக்கட்சிகள் மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அறியவில்லை என SLPP இன் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

ஓர் அரசியல் கட்சியாக சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை அழைத்துள்ளார்.

“நானும் சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளேன். ஆனால் நிகழ்ச்சி நிரல் பற்றி எனக்கு சரியாகத் தெரியது” என அவர் தெரிவித்தார்.

அரசியல் கட்சி எனும் வகையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சந்திப்பில் கலந்துகொண்டு ஆக்கபூர்வமான திட்ட முன்மொழிவுகளை ஏற்பதுடன், நாட்டுக்கு பாதகமான முன் மொழிவுகளை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எதிர்க்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாங்கள் சுதந்திரமாக முடிவுகளை எடுக்கக்கூடிய அரசியல் கட்சி என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

(Visited 12 times, 1 visits today)
See also  கண்டியில் 5 வயது மகளுக்கு தாய் செய்த கொடூரம்
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content