ஐரோப்பா செய்தி

வரலாற்று சிறப்புமிக்க இத்தாலிய மடாலயத்தில் தீ விபத்து

  • October 12, 2025
  • 0 Comments

வடக்கு இத்தாலியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பெர்னாகா மடாலயத்தில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது. சம்பவத்தை தொடர்ந்து 22 கன்னியாஸ்திரிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். 1628ம் ஆண்டு நிறுவப்பட்ட மிலனுக்கு அருகிலுள்ள லா வாலெட்டா பிரையன்சாவில் உள்ள மடாலயத்தில் இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கன்னியாஸ்திரிகள் காயங்கள் இல்லாமல் வெளியேற்றப்பட்டனர், ஆனால் பல விலைமதிப்பற்ற கலைப்படைப்புகள் அழிந்து போனதாக இத்தாலிய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. லா வாலெட்டா பிரையன்சாவின் மேயர் மார்கோ பன்செரி, […]

இலங்கை செய்தி

இலங்கை: நாரம்மல பகுதியில் நடந்த சாலை விபத்தில் இரண்டு இளைஞர்கள் மரணம்

  • October 12, 2025
  • 0 Comments

நாரம்மல (Narammala), அலஹிடியாவ (Alahitiyawa) சாலையில் நடந்த வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். லாரி ஒன்று வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து தொலைபேசி கம்பம் மீது மோதி சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்தின் விளைவாக, லாரியின் பின்புறத்தில் பயணித்த இருவர் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். பின்னர் அவர்கள் நாரம்மல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்கள் வவுனியா மற்றும் நெடுங்கேணியைச் சேர்ந்த 26 மற்றும் 29 வயதுடையவர்கள் என […]

இந்தியா செய்தி

இந்தியா-வங்கதேச எல்லையில் 2.82 கோடி மதிப்புள்ள 20 கிலோ தங்க பிஸ்கட்கள் பறிமுதல்

  • October 12, 2025
  • 0 Comments

மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள இந்தியா-வங்காளதேச எல்லைக்கு அருகே தங்க பிஸ்கட் கடத்தல்காரர் ஒருவர் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் (BSF) கைது செய்யப்பட்டுள்ளார். முஸ்லிம்பாரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு இந்தியர், வங்காளதேசத்திலிருந்து ஹொரண்டிபூர் பகுதி வழியாக கொண்டு வரப்பட்ட சட்டவிரோத தங்கத்தை கடத்த திட்டமிட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட குறித்த நபரிடமிருந்து ​​சுமார் 2.82 கோடி ரூபாய் மதிப்புள்ள 20 தங்க பிஸ்கட்டுகள் மீட்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட […]

ஐரோப்பா செய்தி

ஸ்பெயினில் நடந்த தீவிர வலதுசாரி பேரணியில் 17 பேர் கைது

  • October 12, 2025
  • 0 Comments

ஸ்பெயினின் வடக்கு நகரமான விட்டோரியாவில் முன்னாள் சர்வாதிகாரி பிரான்சிஸ்கோ பிராங்கோவின் பாசிச ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்களுடன் மோதியதை அடுத்து 17 பேரை கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பிரான்சிஸ்கோ பிராங்கோவின் மரணத்தின் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாகவும், அவரது 1939-1975ம் ஆண்டு ஆட்சியின் மரபை எதிர்த்துப் போராடும் விதமாகவும் ஒரு பேரணி திட்டமிடப்பட்டிருந்தது. விட்டோரியாவில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடி இருந்த நிலையில் முகமூடி அணிந்த எதிர்ப்பாளர்கள் பேரணியில் நுழைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மோதலில் பொருட்களை வீசி எறிந்து, […]

பொழுதுபோக்கு

இப்படி மாட்டிக்கிட்டியே பங்கு… சிறகடிக்க ஆசை பரபரப்பு ப்ரோமோ

  • October 12, 2025
  • 0 Comments

சீரியல்கள் என்றாலே பெண்கள் பார்க்கும் காலம் போய், தற்போது பெண்களுக்கு இணையாக ஆண்களும் சீரியல்களை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை. அதிலும் சன்டிவி, விஜய் டிவி சீரியல்கள் தான் அதிகம் மக்கள் மத்தியில் பெரிதும் பார்க்கப்படுகின்றது. இதில், இரு செனல்களும் போட்டி போட்டு சீரியல்களை ஒளிபரப்புவார்கள். இதில் சன்டிவி தான் டாப்பில் இருக்கும். ஆனால் சன்டிவி சீரியலுக்கும் டாப் கொடுக்கும் விஜய் டிவியின் ஒரே ஒரு சீரியல் தான்  “சிறகடிக்க ஆசை”. இந்த சீரியலில் ஒவ்வொரு நாளும் […]

செய்தி விளையாட்டு

INDvsWI Test – மூன்றாம் நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி

  • October 12, 2025
  • 0 Comments

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில், அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. நாணய சுழற்சியை வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தார். அந்தவகையில், இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 518 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

சமந்தா வாங்கியிருக்கும் புது வீட்டில் இதை கவனித்தீர்களா??

  • October 12, 2025
  • 0 Comments

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து பிரபல்யமடைந்தார். அவருடைய அழகான முகமும் சிறுபிள்ளைத் தனமான யதார்த்தமும் அனைவருக்கும் பிடிக்கும். குறிப்பாக அவருக்கு திருமணம் முடிந்த பின்பும் அவரை காதலித்த இளைஞர்கள் ஏராளம் என்றே சொல்லலாம். ஆனால் அந்த சந்தோஷம் அவருக்கு நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. இடைப்பட்ட வருடங்களில் அவர் சந்திக்காத துன்பங்களே கிடையாது என்று கூறலாம். ஒரு பக்கம் விவாகரத்து, மறு பக்கம் நோய், முன்னாள் கணவரின் இரண்டாவது திருமணம் என […]

உலகம்

அரசு முடக்கத்திற்கு மத்தியில் துருப்புகளுக்கு ஊதியம் வழங்குமாறு பென்டகனுக்கு உத்தரவிட்டுள்ள ட்ரம்ப்

  • October 12, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை(11) ட்ரூத் சோஷியலில், பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்தை அக்டோபர் 15 ஆம் திகதி துருப்புக்கள் தங்கள் ஊதியத்தைப் பெறுவதை உறுதிசெய்ய கிடைக்கக்கூடிய அனைத்து நிதிகளையும் பயன்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார். மேலும் ‘இதைச் செய்வதற்கான நிதியை நாங்கள் இணங்கண்டுள்ளோம், செயலாளர் ஹெக்ஸெத் அவற்றைப் பயன்படுத்தி நமது துருப்புக்களுக்கு பணம் செலுத்துவார்’ என்று டிரம்ப் பதிவிட்டார். அமெரிக்க அரசு அக்டோபர் 1 ஆம் திகதி ஒரு பணிநிறுத்தத்தில் நுழைந்தது, இது கிட்டத்தட்ட ஏழு […]

உலகம்

காசா உச்சிமாநாட்டிற்கு முன்பு எகிப்தில் கார் விபத்தில் 3 கத்தார் அதிகாரிகள் பலி

  • October 12, 2025
  • 0 Comments

எகிப்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற கார் விபத்தில் கத்தார் ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றி வந்த 3 அதிகாரிகள் உயிரிழந்தனர். மேலும், இருவர் படுகாயமடைந்தனர். காசா அமைதி ஆலோசனை கூட்டம் நடைபெறும் ஷார்ம் எல் ஷேக் நகரின் ரெட்சி ரெசாட் பகுதியில் இந்த விபத்து நடைபெற்றது. விபத்தில் காயமடைந்த இரு அதிகாரிகளும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கார் விபத்தில் சிக்கிய கத்தார் அதிகாரிகள், நாளை நடைபெறும் காசா அமைதி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்களா அல்லது […]

ஐரோப்பா

ரஷ்யா ஊடான எல்லை பகுதியை மூடிய எஸ்தோனியா!

  • October 12, 2025
  • 0 Comments

ரஷ்ய பிரதேசத்தின் ஒரு பகுதியாக செல்லும் வழியை நேற்று எஸ்தோனியா திடீரென மூடியுள்ளது. குறித்த பாதையில் ரஷ்யாவின் துருப்புக்கள் இருப்பதாக கிடைகப்பெற்ற தகவல்களுக்கு அமைய மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எஸ்தோனியாவின் இந்த நடவடிக்கையை காவல்துறை மற்றும் எல்லைக் காவல் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது. ரஷ்ய கூட்டமைப்பின் எல்லைக்குள் வழக்கத்தை விட பெரிய அளவிலான ஒரு பிரிவு நகர்வதை எல்லைக் காவலர்கள் கவனித்ததை அடுத்து” இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வாரியம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.  எஸ்தோனியாவில் மக்களின் பாதுகாப்பை […]

error: Content is protected !!