இலங்கை

இந்தியப் பெருங்கடலில் நில அதிர்வு – இலங்கை நிலை என்ன?

  • November 1, 2025
  • 0 Comments

இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலையில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது. 6.0 ரிக்டர் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நில அதிர்வு மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குத் தொலைவில் ஏற்பட்டுள்ளதால், எந்தவிதமான சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. இருப்பினும், உயிர்ச் சேதம் அல்லது பொருள் சேதம் குறித்த எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நில அதிர்வினால் இலங்கை மற்றும் இந்தியக் கடற்கரைகளுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்வியல்

உடல் எடையின் ஆபத்து குறித்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  • November 1, 2025
  • 0 Comments

மனிதர்கள் உடல் எடையைக் குறைப்பது தொடர்பில் பின்பற்றும் நடைமுறைகளின் ஆபத்து குறித்து புதிய ஆய்வு ஒன்றில் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, உடல் நிறை குறியீட்டை (BMI) மட்டுமே ஆரோக்கியத்தின் முக்கிய அளவீடாகப் பயன்படுத்துவது முறையானது இல்லை என இந்த ஆய்வின் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 91 நாடுகளில் 471,000 பெரியவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், எடை மற்றும் உயரத்தை மட்டுமே கருத்தில் கொள்வதால், ஆரோக்கியத்திற்கு அதிக ஆபத்தை விளைவிக்கும் உள்ளுறுப்புக் கொழுப்பை (Visceral Fat) அடையாளம் […]

ஐரோப்பா

வலுவடைந்துவரும் யூரோவின் மதிப்பு – வட்டி விகிதங்களைக் குறைக்க இத்தாலி கோரிக்கை

  • November 1, 2025
  • 0 Comments

ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானி வலியுறுத்தியுள்ளார். யூரோவின் வலுவான மதிப்பு தங்கள் நாட்டின் ஏற்றுமதியாளர்களைப் பாதித்து வருவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஆணையருடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார். “அமெரிக்கா விதித்த கட்டணங்களுக்கு மேலதிகமாக, பலவீனமடைந்து வரும் டாலரும், வலுவான யூரோவும் நமது ஏற்றுமதியாளர்களைச் சிரமத்தில் ஆழ்த்துகின்றன. அமெரிக்க மத்திய வங்கி போல, ஐரோப்பிய மத்திய […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையில் சமூக ஊடகங்கள் மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி தீவிரம்

  • November 1, 2025
  • 0 Comments

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ஆட்களை ஏமாற்றிய சம்பவம் பற்றி கூடுதலான முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. இலங்கையில் சமூக ஊடகங்கள் வாயிலாகத் தொடர்பு கொண்டும், போலிப் பிரச்சார நடவடிக்கைகள் ஊடாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. பல பிரச்சார விளம்பரங்கள் போலியானவை. இவற்றை வெளியிடுவதற்கு முன்னதாகப் பணியகத்தின் அனுமதி பெற வேண்டியிருந்தாலும், பெரும்பாலான விளம்பரங்களுக்கு அத்தகைய அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை. எனவே, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அனுமதியின்றி சமூக ஊடகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் […]

உலகம்

பிரேசிலில் விளையாட மறுத்த தாயை கொடூரமாக கொலை செய்த 9 வயது மகன்

  • November 1, 2025
  • 0 Comments

பிரேசிலில் தாயைக் கொலை செய்த ஒன்பது வயது சிறுவன் தொடர்பில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. வெளியில் சென்று விளையாட மறுப்பு தெரிவித்த 37 வயதான தாயை சிறுவன் பல முறை கத்தியால் குத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளியில் சென்று விளையாடுவது தொடர்பாகத் தாய்க்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்தது. பலத்த காயங்களுக்கு உள்ளான அந்தப் பெண், அயலவர்களின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மகனின் கத்திக் குத்துக்கு இலக்கான தாய், […]

செய்தி

இலங்கையில் அரச சேவையில் செயற்கை நுண்ணறிவுப் புரட்சி – ஜனாதிபதியின் புதிய பயிற்சித் திட்டம்

  • November 1, 2025
  • 0 Comments

அரச உத்தியோகத்தர் மத்தியில் செயற்கை நுண்ணறிவை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஜனாதிபதி செயலகமும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சும் இணைந்து அமுலாக்கும் “AI for Transforming Public Services” என்ற பயிற்சி நெறி சமீபத்தில் வட மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது. டிஜிட்டல் மயப்படுத்தல் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தல் ஊடாக அரச துறையில் நவீனங்களைப் புகுத்தி மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல், பொது மக்கள் சேவையைச் செயற்றிறன் வாய்ந்தவையாக மாற்றுதல், வெளிநாட்டுப் பயிற்சி வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுத்தல், டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கைகளுக்காகத் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

எலான் மஸ்கின் க்ரோகிபீடியா – தொழில்நுட்ப உலகில் புதிய புரட்சி

  • November 1, 2025
  • 0 Comments

பிரபலமான விக்கிப்பீடியாவிற்கு (Wikipedia) போட்டியாக க்ரோகிபீடியா (Grokipedia) என்ற புதிய AI வலைத்தளத்தை உலகின் முதல்தர கோடீஸ்வரர் வர்த்தகரான எலான் மஸ்கின் (Elon Musk) xAI நிறுவனம் உருவாக்கியுள்ளது. உண்மையான தகவல்களை மட்டும் அடிப்படையாக் கொண்ட இணைய களஞ்சியமாக க்ரோகிபீடியா வடிவமைக்கப்பட்டுள்ளது. விக்கிப்பீடியாவுக்கு எதிர்மறையான கொள்கைகளைக் கொண்ட வகையில் க்ரோகிபீடியா அமைக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். க்ரோகிபீடியாவில் உள்ள அனைத்து கட்டுரைகளும் AI மற்றும் க்ரோக் (Grok) எனப்படும் ஒரு ஜெனரேட்டிவ் AI மூலம் திரட்டப்படுவதாக அதன் […]

உலகம்

வல்லரசான அமெரிக்காவில் தீவிரமடைந்துள்ள மூடநம்பிக்கை – 13 என்ற இலக்கத்தில் மர்மம்

  • November 1, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் 13 என்ற இலக்கம் தொடர்பில் மூடநம்பிக்கை நீண்டகாலமாக நீடித்து வருவதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக நியூயோர்க்கில் இந்த மூட நம்பிக்கை அதிகரித்துள்ளதுடன், 13 என்ற இலக்கத்தை பலரும் வெறுப்பதாக தெரியவந்துள்ளது. கட்டடத்துறை சார்ந்த துறையில் பணியாற்றுவோர், தாம் நிர்மாணிக்கும் கட்டடங்களில் 13 என்ற தளத்தை பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர். பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 13ஆவது தளம் இல்லாத பல கட்டடங்கள் நியூயார்க்கில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்மையில் ஸ்ட்ரீட் ஈஸி (StreetEasy) என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் […]

உலகம்

பாதுகாப்பு ஒத்துழைப்பில் இந்தியா – அமெரிக்கா! 10 ஆண்டுகளுக்கான புதிய உடன்படிக்கை

  • November 1, 2025
  • 0 Comments

அடுத்த பத்தாண்டுகளில் தமக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை விஸ்தரித்துக் கொள்ளும் நோக்கத்துடன், இந்தியாவும், அமெரிக்காவும் சட்டக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் (Pete Heggseth), இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தை மலேசியத் தலைநகரில் இடம்பெற்றது. இந்தியாவும், அமெரிக்காவும் பரஸ்பரம் வரி விதித்து வர்த்தகப் போட்டியில் ஈடுபடும் சூழ்நிலையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றிய செய்தி வெளியாகிறது.

உலகம் செய்தி

ஜப்பானில் கரடிகளை கொன்றொழிக்க ஆட்சேர்ப்பு நடவடிக்கை தீவிரம்

  • November 1, 2025
  • 0 Comments

ஜப்பானில் கரடிகளை கொன்றொழிக்க வேட்டைக்காரர்களை இணைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பானில் கரடிகள் மனிதர்களைத் தாக்கும் சம்பவங்கள் தீவிரமாக அதிகரித்துள்ளது. இதனால் கரடிகளைக் கொன்றொழிக்க வேட்டைக்காரர்களை ஆட்சேர்ப்பு செய்வது பற்றி அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. அனுமதி பெற்ற வேட்டைக்காரர்களையும், கரடிகளைக் கையாளக் கூடியவர்களையும் வாடகைக்குப் பெற நிதி ஒதுக்கீடு மேற்கொள்வதாக ஜப்பானின் சுற்றுச்சூழல்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இவ்வாண்டு மாத்திரம் நகர்ப்புறங்களை ஊடுருவிய கரடிகள் தாக்கி ஜப்பானில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

error: Content is protected !!