அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களை நீதிபதிகள் விமர்சிப்பது பொருத்தமற்றது – சாகர காரியவசம்!
கொள்கை ரீதியில் அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களை நீதிபதிகள் விமர்சிப்பது நாட்டுக்கு பொருத்தமற்றது எனவும் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை வரையறை செய்ய வேண்டும் எனவும், ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற (05) விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “நீதிமன்றங்களில் தேக்கமடைந்துள்ள வழக்கு விசாரணைகள் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைவதற்கு ஒரு தடையாக உள்ளன. வழக்கு விசாரணைகள் தாமதப்படும் போது […]













