ஐரோப்பா

லண்டன் விமான நிலையத்தில் பயணிகள் மீது மிளகு தண்ணீர் தெளிப்பு!

  • December 7, 2025
  • 0 Comments

லண்டன் ஹீத்ரோ (Heathrow Airport) விமான நிலையத்தில் உள்ள  வாகன நிறுத்துமிடத்தில் சில ஆண்கள் மிளகு கலந்த தண்ணீரை தெளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் நேரப்படி இன்று காலை 8 மணிக்குப் பிறகு டெர்மினல் 3 இல் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் ஆண்களைக் கொண்ட ஒரு குழுவினர் பயணிகள் மீது மிளகு கலந்த தண்ணீரை தெளித்து  அச்சுறுத்தியதாக குறிப்பிடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் அழைக்கப்பட்ட நிலையில்,  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் […]

இலங்கை

நாளை நடக்கப்போவது என்ன? இன்று வெளியான அறிக்கை

  • December 7, 2025
  • 0 Comments

நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை படிப்படியாக வலுவடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் வெளியிட்ட வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த வகையில், நாளை (8) வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும். மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் 75 மில்லிமீட்டர் வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் பல இடங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் அதிகமாக உள்ளது. […]

இலங்கை

இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரிப்பு

  • December 7, 2025
  • 0 Comments

டித்வா புயலினால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், 190 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (7) மதியம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அனர்த்தங்களால் கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான மரணங்கள் பதிவாகியுள்ளன. கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 232 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பா

பிரித்தானியாவில் புதிய தொழில்வாய்ப்புகளை உருவாக்க £820 மில்லியன் ஒதுக்கீடு!

  • December 7, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள வேலையின்மை பிரிச்சினையை சமாளிக்கும் வகையில் தொழிற்பயிற்சியை மேம்படுத்தும் வகையில் £820 மில்லியன் பவுண்ட்ஸ் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய திட்டங்களின் கீழ், கட்டுமானம் மற்றும் விருந்தோம்பல் துறைகளில் சலுகைகள் சார்ந்த வேலைகளுக்கு பயிற்சியளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. 2026 வசந்த காலத்தில் இருந்து 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க எதிர்பார்க்கப்படுவதாகவும்,  வேலை தேடுபவர்களுக்கு கூடுதல் ஆதரவு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு இளைஞர்களின் வேலையின்மை அதன் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ள […]

இலங்கை

பரிசோதனையின் போது தற்செயலாக வெடித்த துப்பாக்கி – ஒருவர் படுகாயம்!

  • December 7, 2025
  • 0 Comments

மாலபே காவல் நிலையத்திற்குள் துப்பாக்கி ஒன்று தற்செயலாக வெடித்ததில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று காலை துப்பாக்கியை பரிசோதித்துக்கொண்டிருந்தபோது தவறுதலாக வெடித்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொலிஸ் சார்ஜனுக்கு தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த அதிகாரியின் நிலை மோசமாக இல்லை என்று மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். சம்பவம் குறித்து மாலபே காவல்துறயைினர் மேலதிக விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

இலங்கை

வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர் கைது!

  • December 7, 2025
  • 0 Comments

வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட சிகரெட்டுகளுடன் இன்று காலை கட்டுநாயக்கா பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிகரெட்டுக்களை நாட்டிற்குள் கடத்த முயன்றபோது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு, வெல்லம்பிட்டியவில் வசிக்கும் 48 வயதுடைய ஓட்டுநர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். துபாயிலிருந்து  FlyDubai FZ 569 என்ற விமானத்தில்  கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்த குறித்த நபர் 28,000 வெளிநாட்டு […]

இலங்கை

மின் பரிமாற்றக் கட்டமைப்பு சீர் செய்யப்பட்டது

  • December 7, 2025
  • 0 Comments

ரந்தம்பே முதல் மஹியங்கனை வரை செல்லும் 132 கிலோவோல்ட் மின் பரிமாற்றக் கட்டமைப்பு தற்போது சீர்செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை 5.30 மணியளவில் இக்கட்டமைப்பை வழமைக்கு கொண்டுவர முடிந்ததாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதனையடுத்து மஹியங்கனை மற்றும் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சீரற்ற காலநிலையால் குறித்த மின் பரிமாற்றக் கட்டமைப்பு மற்றும் மின்வடங்களில் ஏற்பட்ட சேதங்கள் காரணமாக பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக […]

இலங்கை

மண்சரிவு அபாயம் – கேகாலை மாவட்டத்தில் சில குடும்பங்கள் வெளியேற்றம்!

  • December 7, 2025
  • 0 Comments

கேகாலை மாவட்டத்தில் உள்ள ருவன்வெல்ல, ரத்தகல மற்றும் ஹட்டனில் உள்ள ரோசெல்ல மாணிக்கவத்த காலனியில் வசிக்கும் பல குடும்பங்கள் மண்சரிவு அபாயம் காரணமாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். அதன்படி, ருவன்வெல்ல, ரத்தகல பகுதியில் உள்ள 11 குடும்பங்கள் ரத்தகல ஆரம்பப் பாடசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. இதேபோல், ரொசெல்ல மாணிக்கவத்த காலனியில் உள்ள 13 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் வெலிஓயா தமிழ் மகா வித்தியாலயத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

உலகம்

ஆசிய நாடுகளை உலுக்கிய பேரிடர் – 2000ஐ நெருங்கும் மரணங்கள்!

  • December 7, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900 ஐக் கடந்துள்ளது. கடந்த வாரம் மலாக்கா ஜலசந்தியில் உருவான ஒரு அரிய மற்றும் சக்திவாய்ந்த சூறாவளியால் தெற்காசிய நாடுகளில் கனமழை மற்றும் வெள்ளம், மண்சரிவு ஏற்பட்டது. இதில் இந்தோனேசியாவில் 100,000 க்கும் மேற்பட்ட வீடுகள் அழிவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இலங்கை, தாய்லாந்து, மலேசியா மற்றும் வியட்நாமில் ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 2,000 ஐ நெருங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆச்சே தமியாங்கும் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் வீதிகளில் தவிக்கும் புகலிட கோரிக்கையாளர்கள்!

  • December 7, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் குளிர் காலநிலை ஆரம்பமாகியுள்ள நிலையில் வீடற்ற பலர் பல இன்னல்களை அனுபவித்து வருவதாக லண்டனில் அமைந்துள்ள  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் உள்துறை அலுவலகம் புகலிட விடுதி சோதனையை தற்காலிகமாக 56 நாட்களுக்கு நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அதேநேரம் அகதிகள் புகலிட விடுதியை காலி செய்ய 28 நாள் அறிவிப்பு காலத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. இதற்கிடையில் வீடற்ற அகதிகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் பாதுகாப்பான புகலிடத்தை கண்டுப்பிடிக்க கடுமையாக போராடி வருவதாகவும் […]

error: Content is protected !!