ஐரோப்பா

பிரான்ஸ் தூதரை வெளியேற உத்தரவு – நைஜர் ராணுவ அரசுக்கு பிரான்ஸ் ஜனாதிபதியின் பதிலடி

  • August 29, 2023
  • 0 Comments

நைஜர் நாட்டின் ராணுவ ஆட்சியாளர்கள் அழுத்தம் கொடுத்தாலும் பிரான்ஸ் தூதர் அங்குதான் தங்கியிருப்பார் என்று கூறியுள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவேல் மேக்ரான். நைஜர் நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள ராணுவம், கடந்த வெள்ளிக்கிழமையன்று, நைஜர் நாட்டுக்கான பிரான்ஸ் தூதர் 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என உத்தரவிட்டிருந்தது.பிரான்ஸ் தூதரான Sylvain Itté, நைஜரின் வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பிற்கான அழைப்பிற்கு பதிலளிக்க மறுத்ததால், அவரை நாட்டை விட்டு வெளியேற்ற முடிவு செய்யப்பட்டதாக ராணுவ அரசின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. […]

வட அமெரிக்கா

கனடியர்களின் ஆயுட்காலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்…

  • August 29, 2023
  • 0 Comments

கனடிய மக்களின் ஆயுட்காலத்தில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய மக்களின் ஆயுட்காலம் 81.7 வயதுகளிலிருந்து 81.6 வயதாக குறைவடைந்துள்ளது.இதேவேளை கனடாவில் இறப்பு வீதமும் ஒரு வீதத்தினால் உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.கடந்த 2021 ஆம் ஆண்டு புள்ளி விபர தகவல்கள் மூலம் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன. குறிப்பாக புற்றுநோய், இருதய நோய், மித மிஞ்சிய அளவில் மருந்து பயன்படுத்துதல் மற்றும் கோவிட் 19 நோய் தொற்று ஆகிய ஏதுக்களினால் இவ்வாறு அதிகளவு மரணங்கள் சம்பவித்துள்ளன.கனடிய புள்ளி விபரவியல் […]

பொழுதுபோக்கு

300 கிலோ போதைப் பொருள் கடத்தலில் சரத்குமார் வரலட்சுமிக்கு தொடர்பா? கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு

  • August 29, 2023
  • 0 Comments

கேரளா மாநிலம் விளிஞ்சம் கடற்கரையில் கடந்த 2021-ம் ஆண்டு போதைப்பொருள்கள் மற்றும் ஏகே 47 உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. சுமார் 300 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ விசாரித்து வந்தது. ஏற்கனவே இந்த வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், லிங்கம் என்கிற ஆதிலிங்கம் என்பவரை சென்னை சேலையூரில் வைத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். […]

இலங்கை

இலங்கையில் மின்சார பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்!

  • August 29, 2023
  • 0 Comments

பொது போக்குவரத்து சேவைகளுக்காக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்ட மின்சார பஸ்களின் எண்ணிக்கையை 50 இல் இருந்து 200 ஆக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, இது தொடர்பான கொள்முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 27.02.2023 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மேல்மாகாணத்தை உள்ளடக்கிய இலங்கை போக்குவரத்துச் சபையின் சார்பில் இயங்கும் 50 மின்சாரப் பேருந்துகளை அரச தனியார் கூட்டுத் திட்டமாக கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இத்திட்டத்தின் மூலம்  எதிர்பார்க்கப்படும் நன்மைகளை அடைவதற்கு   உத்தேச திட்டத்தின் […]

இலங்கை

பொலிஸ் காவலில் வீட்டுப் பணிப்பெண் மரணம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ஆர்.ராஜகுமாரி என்ற வீட்டுப் பணிப்பெண்ணின் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் செப்டம்பர் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்ட வெலிக்கடைப் பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். பதுளையைச் சேர்ந்த 41 வயதுடைய ராஜகுமாரி, தமக்குச் சொந்தமான தங்க நகைகளைத் திருடியதாகக் கூறி, அவரது முதலாளியும் பிரபல […]

இலங்கை

யாழில் போதை கும்பலின் ஒன்றுகூடல் மையங்களாக மாறி வரும் பாழடைந்த வீடுகள்

  • August 29, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் நகர் பகுதி, மற்றும் புறநகர் பகுதிகளில் ஆட்கள் அற்ற வீடுகளில் ஒன்று கூடும் போதைக்கு அடிமையானவர்கள் , அந்த வீடுகளில் இருந்து போதையை நுகர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆட்கள் அற்று , பாழடைந்த வீடுகளில் மாலை வேளைகளில் ஒன்று கூடும் போதைக்கு அடிமையான கும்பல்கள் , அந்த வீடுகளில் கும்பல் கும்பலாக போதை பொருட்களை நுகர்ந்து கொள்கின்றனர். அவர்கள் வீடுகளுக்குள் இருந்து பெரும் குரல் எழுப்பி சத்தங்களையும் எழுப்புவதனால் , அவ்வீடுகள் அமைந்துள்ள வீதிகளால் பயணிப்போர் […]

ஆசியா

டொயோட்டா நிறுவனம் தனது உற்பத்தியை நிறுத்தியது!

  • August 29, 2023
  • 0 Comments

உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா, ஜப்பானில் உள்ள தனது தொழிற்சாலைகளில் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. உற்பத்தி நடவடிக்கையில் ஏற்பட்ட பிழை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இதன் காரணமாக உலகிலேயே அதிகம் விற்பனையாகும் காரின் உற்பத்தி ஜப்பானில் இன்று (29.08) காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கார் ஆக்சஸெரீகளுக்கான ஆர்டர்களை ஃபார்வேர்டு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், பிழையை அடையாளம் காண நடவடிக்கை எடுத்து […]

இலங்கை

மன்னார் நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மகோற்சவ தேர் திருவிழா!

மன்னார் நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மகோற்சவ தேர் திருவிழா இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (29) காலை 10 மணியளவில் ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீச்சரத்திற்கு அடுத்து பெரிய ஆலயமாக காணப்படும் நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரி அம்மன் ஆலய மகோற்சவ தேர் திருவிழாவின் 14 நாள் தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக இடம்பெற்றது. இதன் போது ஆலயத்தைச் சுற்றி பக்தர்களால் காவடி எடுக்கப்பட்டு அங்கபிரதிஸ்ரை,செதில் காவடி,பறவை காவடி,கற்பூர […]

இலங்கை

யாழில் நடுவீதியில் தீப்பற்றி எரிந்த வாகனம்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லை சந்திப்பகுதியில், பட்டா வாகனம் தீப்பிடித்ததில் எரிந்து சம்பலாகியுள்ளது. மின் கசிவினால் வாகனம் தீப்பற்றியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பருத்தித்துறை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த பொருட்கள் ஏற்றும் பட்டா வாகனமே இவ்வாறு எரிந்து சம்பலாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலியா

உலகிலேயே முன்முறையாக… மனித மூளையில் உயிருள்ள புழு

  • August 29, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் ஒரு ஏரிக்கரை அருகில் வசித்து வந்த 64 வயது பெண்மணிக்கு நீண்ட நாட்களாக உடல் ஆரோக்கியத்தில் பல குறைபாடுகள் இருந்து வந்தன. நிமோனியா எனப்படும் மார்புச்சளி, வயிற்று வலி, வயிற்று போக்கு, வறட்டு இருமல், காய்ச்சல், இரவு வியர்வை, மனச்சோர்வு மற்றும் நினைவாற்றல் குறைபாடு ஆகியவற்றுக்கு அவர் நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் மாத்திரை, மருந்துகளால் அவருக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. 2021 ஜனவரி மாத கடைசியில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு […]

error: Content is protected !!