அறிவியல் & தொழில்நுட்பம்

AI தொழில்நுட்ப உதவியுடன் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை!

  • September 13, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் தீயணைப்புத் துறைக்கும் தொழில்நுட்பம் AI கைகொடுத்துள்ளது. கலிபோர்னியாவில் நள்ளிரவில் பற்றிய காட்டுத் தீயை அணைக்க AI உதவியிருக்கிறது. ஆபத்துகளை முன்கூட்டியே கண்டறிவதற்குக் கலிபோர்னிய அதிகாரிகள் பயன்படுத்தும் கண்காணிப்பு முறையில் AI தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி, கிலிவ்லந்து (Cleveland) தேசிய வனப்பகுதியின் நேரடி நிலவரத்தைக் கண்காணிக்கும் கணினிகள் புகைமூட்ட அறிகுறியைக் கண்டுபிடித்தன. அத்தகவலைச் சரிபார்த்த அதிகாரிகள் அதனை உறுதிசெய்தனர். தீ உடனடியாக அணைக்கப்பட்டது. AI தொழில்நுட்பம் தக்க நேரத்தில் எச்சரிக்காமல் இருந்திருந்தால் மிகப்பெரிய […]

வட அமெரிக்கா

மொரோக்கோ வானில் தோன்றிய மர்ம ஒளி – வைரலாகும் வீடியோ

  • September 13, 2023
  • 0 Comments

மொரோக்கோவில் நிலநடுக்கம் ஏற்படுவதற்குமுன் வானத்தில் மர்மமான ஒளி தென்பட்டதாக சமூக ஊடகத் தளங்களில் வீடியோ ஒன்று விரிவாகப் பகிரப்படுகிறது. வானத்தில் திடீரென்று நீல வெளிச்சம் தோன்றுகிறது. சில நொடிகளில் அது மறைந்த நிலையில் மீண்டும் ஒளி தோன்றுகிறது. நில நடுக்கம் ஏற்படும் இடங்களில் வானத்தில் அத்தகைய ஒளி தென்படுவது வழக்கம். பல நூற்றாண்டுகளுக்கு முன்புகூட அப்படி ஒளி காணப்பட்டது. 18, 19, 20 ஆகிய நூற்றாண்டுகளில் கிட்டத்தட்ட 65 நிலநடுக்கச் சம்பவங்களில் ஒளி தென்பட்டதாகப் வரலாற்றுப் பதிவுகள் […]

இலங்கை முக்கிய செய்திகள்

திருகோணமலையில் பரபரப்பை ஏற்படுத்திய மீனவர்கள்

  • September 13, 2023
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தில் 176 பேருக்கு வழங்கப்பட்ட சுருக்கு வலை அனுமதியை இரத்து செய்யுமாறு கோரி இன்றைய தினம் (13) வீதியை மறித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை சிறிமா ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் திருக்கடலூர் வழியாக ஏகாம்பரம் வீதியூடாக வந்து திருகோணமலை- கண்டி பிரதான வீதியிலுள்ள மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னாள் பதாகைகளை ஏந்தியவாறு வீதியில் அமர்ந்த வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடல் வளம் அழிந்து போவதாகவும், மீனவர்களின் தொழில் அற்று போய் வருவதாகவும், அரச […]

இலங்கை

திருகோணமலையில் பௌத்த விகாரை – பிக்குவிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

  • September 13, 2023
  • 0 Comments

திருகோணமலை- பொரலுகந்த ரஜமஹா விகாரை அமைப்பதற்கு முன்னின்று செயற்பட்ட பௌத்த பிக்குவிற்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மொரவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மொரவெவ- தெவனிபியவர இந்ரா ராம விகாரையின் விஹாராதிபதி பொல்ஹேன்கொட உபரத்ன ஹிமி 2023/09/11 ம் திகதி இம்முறைப்பாட்டினை செய்துள்ளார். அம்முறைப்பாட்டில் சொகுசு வெள்ளை வேனில் நான்கு பேர் தனக்கு சொந்தமான இரண்டு விகாரைகளுக்கும் தேடிச் வந்ததாகவும், குறித்த வேனில் வருகை தந்தவர்கள் யார் என்று தெரியாது எனவும் தனக்கு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் […]

இலங்கை

இலங்கையில் உச்சக்கட்டத்தை எட்டிய எலுமிச்சை விலை

  • September 13, 2023
  • 0 Comments

இலங்கையில் எலுமிச்சை விலை பாரியளவில் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் மக்கள் தற்போது நாட்டில் 1400 ரூபாய் தொடக்கம் 1600 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில் ஒரு கிலோ கிராம் எலுமிச்சை விற்பனை செய்யப்படுகின்றது. இவ்வாறான விலைக்கு விற்கப்படும் எலுமிச்சை மிகவும் சிறியது எனவும் தெரிவித்தனர். இந் நிலைமைகள் குறித்து நகர காய்கறி வியாபாரிகள் பலரிடம் கேட்டபோது, ​​தற்போது சந்தையில் எலுமிச்சை தட்டுப்பாடு நிலவுவதாகவும், இந்த நிலைகளால் எலுமிச்சை விலை கடுமையாக […]

வாழ்வியல்

கழிவறையில் செல்போன் பயன்படுத்துபவரா நீங்கள்? காத்திருக்கும் ஆபத்து

  • September 13, 2023
  • 0 Comments

மனிதர்கள் உதவிக்காக செல்போன் கண்டறியப்பட்டது என்பது மாறி தற்போது செல்போன் பயன்பாடில்லாமல் ஒன்றுமே இல்லை எனும் அளவுக்கு நவீன உலகம் மாறிவிட்டது. செல்போன் இல்லாமல் 10 நிமிடங்கள் கூட பலரால் இருக்க முடியவில்லை. தூங்கும்போது கூட பாடல் கேட்டால் தான் தூக்கமே வருகிறது எனும் அளவை தாண்டி கழிவறைக்கு கூட செல்போன் இல்லாமல் பலர் செல்வதில்லை. கழிவறையில் செல்போன் பயன்பாடு என்பது பேராபத்து என்று பல செய்திகள் உலா வந்தாலும், விழிப்புணர்வு வீடியோ பதிவு என்றாலும் அதனை […]

இலங்கை

ஜனாதிபதி ரணில் வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி!

  • September 13, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. இதன்படி, பயணிகளுக்கும் பண்டங்களுக்குமான பொதுப் போக்குவரத்து சேவைகளும், ரயில் பாதைகள் மூலமான போக்குவரத்து சேவைகளுக்கான வசதிகளை ஏற்பாடு செய்து பேணுதலும் அத்தியாவசிய செயற்பாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்கா

அமெரிக்காவில் TikTokஇல் பொருள் வாங்க கூடிய வசதிகள்

  • September 13, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் சமூக ஊடக நிறுவனமான TikTok அதிகாரபூர்வமாக அதன் மின்வர்த்தக வசதியை அறிமுகம் செய்துள்ளது. பல மாதச் சோதனைக்குப் பிறகு அது அறிமுகமாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. TikTok நிறுவனத்தின் அமெரிக்கப் பயனீட்டாளர்கள் 150 மில்லியன் பேர், காணொளிகள், நேரடி ஒளிபரப்புகள் வழியாகப் பொருள்களையும் சேவைகளையும் வாங்குவதற்குரிய இணைப்புகளைப் பெறமுடியும் என குறிப்பிடப்படுகின்றது. TikTok சமூக ஊடகத்தின் வழியாகப் பொருள்களை வாங்கும் மின்வர்த்தக வசதி, ஏற்கெனவே சிங்கப்பூர், மலேசியா, தாய்லந்து, வியட்நாம், பிலிப்பீன்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளில் நடப்பிலுள்ளது.

ஆசியா

சிங்கப்பூரில் புதிதாக பணியாற்ற தயாராகும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • September 13, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் புதிய வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கட்டுமானம், கடல்துறை மற்றும் செயல்முறை (CMP) துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கே அறிவிப்பு லெளியாகியுள்ளது. புதிய work permit அனுமதியின் கீழ் சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு ஊழியர்களின் ஏற்றுக்கொள்ளக்கூடிய தங்குமிடத்திற்கான ஆதார சான்றினை அவர்களின் முதலாளிகள் வழங்க வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் (MOM) இன்று தெரிவித்துள்ளது. அதாவது புதிய work permit கீழ் வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு முன் அதனை செய்ய வேண்டும் எனவும் […]

ஆஸ்திரேலியா

சிட்னி நகரில் வாரத்திற்கு சுமார் 500 பேருந்து பயணங்கள் ரத்து – நெருக்கடியில் மக்கள்

  • September 13, 2023
  • 0 Comments

சிட்னி நகரில் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஓட்டுநர்கள் பற்றாக்குறையால் வாரத்திற்கு சுமார் 500 பேருந்து பயணங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. சில பகுதிகளில் கடும் காலதாமதம் ஏற்படுவதாகவும், குறித்த நேரத்தில் வரும் பேருந்துகளின் சதவீதம் 88 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. போதிய சம்பளம் இன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிட்னி பேருந்து ஓட்டுநர்கள் வேறு வேலைகளுக்குத் திரும்புவதால் ஏற்படும் காலிப் பணியிடங்கள் முறையாக நிரப்பப்படாததே இதற்கு முதன்மைக் காரணம். மாநில அரசு பல்வேறு சலுகைகள் அளித்தாலும் ஊழியர் […]

error: Content is protected !!