இலங்கை

மலேசியாவிற்கு பயணம் செய்யவுள்ள இலங்கை ஜனாதிபதி!

  • September 21, 2023
  • 0 Comments

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு மலேசியாவிற்கு செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. மலேசிய அரசர் விடுத்த அழைப்பிற்கு இணங்க அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விஜயம் அடுத்த வருடம் (2024) இல் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் முதலீடு செய்வதற்கு அதிகளவான நிறுவனங்களை வழிநடத்த ஆர்வமாக உள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு சாதகமான பதிலையும் வழங்கியுள்ளதாகவும் மலேசிய பிரதமர் தெரிவித்தார்

ஐரோப்பா

பெல்ஜியத்தில் புராதன சின்னத்தை உடைத்த சுற்றுலா பயணிக்கு விதிக்கப்பட்ட அபராதம்

  • September 21, 2023
  • 0 Comments

பெல்ஜியம் நாட்டில் புராதன சின்னங்கள் மற்றும் பாரம்பரிய சிலைகள் அங்குள்ள ஒரு மையத்தில் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன.சமீபத்தில் மிகவும் பழமையான சில சிலைகளை சீரமைப்பு திட்டத்தின் கீழ் புதுப்பித்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐரிஷ் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் அந்த மையத்துக்கு சென்று சிலைகளை பார்வையிட்டுள்ளார்.அப்போது அங்கு பாரம்பரியமிக்க 2 சிங்கங்கள் கொண்ட சிலை மற்றும் ஜோதியுடன் ஒரு மனிதனை கொண்ட சிலை ஆகியவற்றை பார்வையிட்டதோடு அந்த சிலைகளின் மீது ஏறி அமர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது […]

இலங்கை

13 வயது சிறுவன் துஷ்பிரயோகம் : பிக்கு கைது!

  • September 21, 2023
  • 0 Comments

13 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் போகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள ரஜமஹா விகாரை ஒன்றில் பணிபுரிந்து வருபவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சந்தேகநபரான சிவரதாரியர் வசிக்கும் ஆலயத்தில் ஆண் குழந்தை ஒன்று பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல் கிடைத்துள்ளது. குறித்த தகவல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை எத்துவெவ பொலிஸாருக்கு அறிவித்துள்ளநிலையில் விசாரணைகள் […]

பொழுதுபோக்கு

நாக சைதன்யாவுடன் இணைந்தார் சாய் பல்லவி… அவரே கூறிவிட்டார்

  • September 21, 2023
  • 0 Comments

மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய் பல்லவி. அதன்பின்னர் விஜய் இயக்கத்தில் வெளியான ‘தியா’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் ‘மாரி 2’, ‘என்.ஜி.கே’, ‘கார்க்கி’ என பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு […]

இலங்கை

யாழ்ப்பாணத்தில் பேருந்து ஒன்று தீயில் எரிந்து நாசமானது!

  • September 21, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தொன்று தீக்கிரையாகியுள்ளது. ஆனைக்கோட்டை சாவல்காட்டு பகுதியில் வசிக்கும் பேருந்து உரிமையாளர் நேற்றைய தினம் இரவு தனது வீட்டின் முன்பாக பேருந்தினை நிறுத்தி வைத்திருந்த நிலையில், இவ்வாறு தீபிடித்து எரிந்துள்ளதாக கூறப்படுகிறது. குடும்பத்தினர் தீயை அணைக்க முயற்சித்தும் பேருந்து முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து   மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் சர்வதேச நீதியைக் கோரிய ஜனநாயகப் போராட்டம்

  • September 21, 2023
  • 0 Comments

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் சர்வதேச நீதியைக் கோரிய ஜனநாயகப் போராட்டம் இன்று (21) வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் திருகோணமலை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது. இதன்போது போர் குற்றங்கள் செய்தவர்களை நீதிக்கு முன் நிறுத்து,பாலியல் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை வேண்டும்,74 வருட இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வேண்டும்,இலங்கையில் இடம் பெற்ற போர் குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதி பொறிமுறையை உறுதி செய்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி […]

பொழுதுபோக்கு

வெங்கட் பிரபுவுடன் இணைந்த சினேகா…. வெளியானது ட்ரெய்லர்

  • September 21, 2023
  • 0 Comments

திருமணத்திற்கு பிறகு தனக்கான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து வரும் சினேகா இப்போது வெங்கட் பிரபுவுடன் இணைந்து ஷாட் பூட் த்ரீ படத்தில் நடித்துள்ளார். குழந்தைகளின் சேட்டையை மையப்படுத்தி உருவாகி உள்ள இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. அருணாச்சலம் வைத்தியநாதன் இயக்கியிருக்கும் இப்படத்தை யுனிவர்ஸ் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. மேலும் பின்னணி இசை, ஒளிப்பதிவு அனைத்தையும் பார்க்கும் போது நிச்சயம் இது ஃபீல் குட் படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. குழந்தைகளை மையப்படுத்தி பல படங்கள் வெளிவந்தாலும் […]

இலங்கை

திலீபனின் உருவச்சிலை பாரவூர்தி மீது தாக்குதல் – சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

  • September 21, 2023
  • 0 Comments

திலீபனின் உருவச்சிலை பாரவூர்தி மீது தாக்குதல் நடாத்திய சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 17ஆம் திகதி திருகோணமலை கொழும்பு வீதியினூடாக திலீபனின் உருவச் சிலையை கொண்டு வரும்போது பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட 14 பேருக்கு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் சந்தேகத்திற்கு நேரில் கைது செய்யப்பட்ட இரு பெண்கள் உட்பட ஆறு பேரையும் கடந்த பதினெட்டாம் திகதி சீனக்குடா பொலிஸார் கைது செய்து திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது 21 ஆம் திகதி […]

இலங்கை

திருகோணமலையில் கடைக்கு சென்று கொண்டிருந்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • September 21, 2023
  • 0 Comments

திருகோணமலை-கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானை தாக்கியதில் நபரொருவர் நேற்றிரவு (20) உயிரிழந்து உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் கந்தளாய் -வெவ்சிறிகம பகுதியைச் சேர்ந்த தெபிலியனகே விமலரத்ன (69வயது) எனவும் தெரியவருகிறது. வீட்டிலிருந்து நடந்து கடைக்கு சென்று கொண்டிருந்தபோது இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை கந்தளாய் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை அதே பகுதியைச் சேர்ந்த தியவுல்பொத்த என்ற இடத்தில் பொலிஸ் SI ஒருவரும் யானையின் தாக்குதலினால் […]

ஆசியா

சீனாவை உலுக்கிய சூறாவளி.. ஒரே நாளில் 10 பேர் பலி

  • September 21, 2023
  • 0 Comments

சீனாவில் பல்வேறு நகரங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வரும் நிலையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர் இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இந்த சூறாவளி காற்றில் பல்வறு உயிர்சேதங்கள், பொருள்சேதங்கள் ஏற்பட்டுள்ளன என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறிப்பாக, சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சுங் மற்றும் யாசெங் நகரில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் சூறாவளி காற்று வீசியது. மேலும், சுகியன் நகரின் சில பகுதிகளில் […]

error: Content is protected !!