உலகம் செய்தி

17 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பும் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன்

  • December 12, 2025
  • 0 Comments

17 ஆண்டுகளாக லண்டனில்(London) சுயமாக நாடுகடத்தப்பட்டு வசித்து வரும், முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின்(Khaleda Zia) மகன் தாரிக் ரஹ்மான்(Tariq Rahman) மீண்டும் வங்கதேசம்(Bangladesh) திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 80 வயதான தலைவர் கலீதா ஜியாவின் உடல்நிலை மோசமடைந்து செயற்கை சுவாசக் கருவியின்(ventilator) உதவியுடன் உள்ள நிலையில் வங்கதேச தேசியவாதக் கட்சி(BNP) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. “எங்கள் செயல் தலைவர் தாரிக் ரஹ்மான் டிசம்பர் 25ம் திகதி டாக்காவுக்குத் திரும்புவார் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று […]

உலகம் செய்தி

பாலியில் இருந்து நாடு கடத்தப்படும் பிரிட்டிஷ் ஆபாச பட நடிகை

  • December 12, 2025
  • 0 Comments

சர்ச்சைக்குரிய பிரிட்டிஷ்(British) ஆபாச திரைப்பட நட்சத்திரமான போனி ப்ளூ(Bonnie Blue), போக்குவரத்து விதிமீறல்களுக்காக ஒரு சிறிய அபராதம் பெற்ற பின்னர், இந்தோனேசியாவின்(Indonesia) பாலி(Bali) தீவிலிருந்து நாடு கடத்தப்படுவார் என்று குடிவரவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ரிசார்ட் தீவின்(resort islan) தலைநகரான டென்பசருக்கு(Denpasar) அருகிலுள்ள பிரபலமான சுற்றுலா மாவட்டமான பதுங்கில்(Bandung) உள்ள ஒரு ஸ்டுடியோவை உள்ளூர் காவல்துறையினர் கடந்த வாரம் சோதனை செய்தனர், அங்கு 26 வயதான போனி ப்ளூ கைது செய்யப்பட்டார். சோதனைக்குப் பிறகு ஆபாச உள்ளடக்கத்தை […]

உலகம் செய்தி

கலிபோர்னியாவில் மது ஆலைக்கு தீ வைக்க முயன்ற இந்திய வம்சாவளி தொழிலதிபர் கைது

  • December 12, 2025
  • 0 Comments

கலிபோர்னியாவின்(California) சரடோகாவில்(Saratoga) உள்ள ஒரு மது ஆலைக்கு தீ வைக்க முயன்றதாகக் கூறப்படும் 42 வயதான இந்திய வம்சாவளி தொழிலதிபர் விக்ரம் பெரி(Vikram Beri) கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், விக்ரம் காவல்துறையிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது சாலையில் கார்களை மோதி விபத்துக்குள்ளாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் பலமுறை வாய்மொழியாக நிலைமையை தணிக்க முயன்றனர், ஆனால் அது பலனளிக்கவில்லை என்றும், மிக நீண்ட மோதலுக்குப் பிறகு மிளகு தெளிப்பைப்(pepper spray) பயன்படுத்த வேண்டியிருந்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறுதியில் […]

இந்தியா செய்தி

உத்தரபிரதேசத்தில் பேஸ்புக் நேரலையில் 24 வயது பெண் தற்கொலை

  • December 12, 2025
  • 0 Comments

உத்தரபிரதேசத்தின்(Uttar Pradesh) விபூதி காண்ட்(Vibhuti Khand) பகுதியில், பேஸ்புக் நேரலையில் 24 வயது பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தற்கொலைக்கு முன்னதாக அம்பேத்கர் நகரில்(Ambedkar Nagar) உள்ள உள்ளூர் நிருபர் மீது புகார் அளித்திருந்ததாகவும் சுமார் ஏழு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து தன்னை ஏமாற்றியதாக ராணுவ வீரர் ஒருவர் மீதும் அவர் புகார் அளித்திருந்ததாகவும் காவல்துறை அதிகாரி அமர் சிங்(Amar Singh) குறிப்பிட்டுள்ளார். காவல்துறையினரின் கூற்றுப்படி, […]

உலகம் செய்தி

ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துகள் ஊடாக உக்ரைன் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஐரோப்பிய ஒன்றியம் முயற்சி.

  • December 12, 2025
  • 0 Comments

ரஷ்யாவின் முழு அளவிலான போருக்குப் பின்னர், சுமார் நான்கு ஆண்டுகளாக உக்ரைன் தனது இராணுவத்தையும் பொருளாதாரத்தையும் நடத்தி செல்வதில் நிதி சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியம், இரண்டு ஆண்டுகளுக்குள் உக்ரைனுக்கு €135.7 பில்லியன் நிதி இடைவெளியை நிரப்ப முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துகளைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. பெல்ஜிய வங்கியான Euroclear இல் மட்டும் ரஷ்யாவின் €185 பில்லியன் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. ரஷ்யா, EU வின் திட்டத்தை கொள்ளைச் செயல்கள் என எச்சரிப்பதுடன் Euroclear மீது மாஸ்கோ நீதிமன்றத்தில் […]

இந்தியா செய்தி

இந்தியாவின் உதவி: மஹியங்கனையில் கள மருத்துவமனை ஆய்வில் உயர் ஸ்தானிகர்.

  • December 12, 2025
  • 0 Comments

மஹியங்கனையில் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நடமாடும் வைத்தியசாலையை ஆய்வு செய்வதற்காக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று (12) காலை சென்றுள்ளார். பேரழிவால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்திய அரசாங்கம் இரண்டு நடமாடும் வைத்தியசாலைகளை செயற்படுத்த உதவியது. அவற்றில் ஒன்று மஹியங்கனை நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று இந்த (12) நடமாடும் வைத்தியசாலையை ஆய்வு செய்வதற்காக சென்றிருந்தார். ஊவா மாகாண ஆளுநர் கபில ஜெயசேகர, இந்திய துணை உயர் […]

உலகம் செய்தி

பிப்ரவரி தேர்தலுக்குப் பிறகு பதவி விலக விரும்பும் வங்கதேச ஜனாதிபதி

  • December 12, 2025
  • 0 Comments

பிப்ரவரி நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தனது பதவிக் காலத்தின் பாதியில் பதவி விலகத் திட்டமிட்டுள்ளதாக வங்கதேச(Bangladesh) ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன்(Mohammad Shahabuddin) தெரிவித்துள்ளார். நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ்(Mohammad Yunus) தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தால் அவமானப்படுத்தப்பட்டதால் இவ்வாறு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், “நான் வெளியேற ஆர்வமாக உள்ளேன்” என்று அவர் டாக்காவில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஷஹாபுதீன் ஜனாதிபதியாக மட்டுமன்றி வங்கதேச ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதியாக உள்ளார், ஆனால் […]

இந்தியா செய்தி

இந்தியாவில் 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு – 11,718 கோடி ரூபா ஒதுக்கீடு.

  • December 12, 2025
  • 0 Comments

இந்தியாவில் 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மத்திய அமைச்சரவை 11,718 கோடி ரூபா நிதி ஒதுக்கியுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (12) கூடியது. இதன்போது எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ‘‘மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-ஐ நடத்த மத்திய அமைச்சரவை […]

உலகம்

நோபல் பரிசு பெற்ற நர்கீஸ் முகமதியை கைது செய்தது ஈரான்!

  • December 12, 2025
  • 0 Comments

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நர்கீஸ் முகமதியை (Narges Mohammadi) ஈரானிய அரசாங்கம் இன்று கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் இரண்டாவது பெரிய நகரமான மஷாத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. நர்கீஸ் முகமதியின் சகோதரரை மேற்கோள் காட்டி இந்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளதாக  சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது. பாரிஸை தளமாகக் கொண்ட அறக்கட்டளை, வழக்கறிஞர் கோஸ்ரோவ் அலிகோர்டியின் ( Khosrow Alikordi) நினைவு விழாவின் போது முகமதி “வன்முறையாக தடுத்து வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. ஈரானின் மிக […]

இலங்கை செய்தி

சீரற்ற வானிலை அனர்த்தம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 640 ஆக உயர்வு.

  • December 12, 2025
  • 0 Comments

சீரற்ற வானிலை அனர்த்தம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 640 ஆக அதிகரிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் நாட்டில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த பேரிடரினால் மேலும் 211 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக, 4 இலட்சத்து 73 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 16 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்புக்குள்ளானவர்களில், 82 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்னும் […]

error: Content is protected !!