உலகம் செய்தி

எப்ஸ்டீன் விவகாரம்: டிரம்ப், கிளின்டன் உள்ளிட்ட பிரபலங்களின் இரகசியப் படங்கள் வெளியீடு.

  • December 13, 2025
  • 0 Comments

எப்ஸ்டீனின் இரகசியப் புகைப்படங்கள் தொடர் வெளியீடு; டிரம்ப், கிளின்டன் உள்ளிட்ட பிரபலங்கள் தொடர்புகள் அம்பலம் பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனின் சொத்துக்களில் இருந்து 95,000க்கும் அதிகமான புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பை அமெரிக்க நாடாளுமன்றக் குழு பெற்றது. இதில், இரண்டாவது கட்டமாக, 80க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் நேற்று ஜனநாயகக் கட்சியினரால் வெளியிடப்பட்டது. இந்த இரகசியப் புகைப்படங்களில் எப்ஸ்டீனின் தனிப்பட்ட தீவுப் புகைப்படங்கள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன், தொழில்நுட்பக் கோடீஸ்வரர் பில் […]

உலகம்

போர் நிறுத்த பேச்சுவார்த்தை – ட்ரம்பின் வெளிநாட்டு தூதுவர் ஜெர்மனுக்கு விஜயம்

  • December 13, 2025
  • 0 Comments

  போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வெளிநாட்டு தூதுவர், இந்த வார இறுதியில் ஜெர்மனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி மற்றும் ஐரோப்பிய தலைவர்களைச் சந்தித்து அவர் கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய வெள்ளை மாளிகை முயற்சிகளுக்கு இவர் தலைமை தாங்குகிறார். கிறிஸ்துமஸ் மாதத்திற்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என ட்ரம்ப் நிர்வாகம் அழுத்தம் கொடுத்து வருகின்றது. இதற்காக […]

உலகம்

ஓமன் வளைக்குடாவில் இலங்கையர்கள் பயணித்த கப்பலை சுற்றிவளைத்த ஈரான்!

  • December 13, 2025
  • 0 Comments

ஓமன் வளைக்குடாவில் பயணித்த எரிபொருள் டேங்கர் கப்பலை நேற்று ஈரானிய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். குறித்த கப்பலில்  இலங்கையர்கள் உட்பட 18 பேர் பயணித்ததாகவும் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையர்களைத் தவிர, கைது செய்யப்பட்ட பணியாளர்களில் இந்தியர்கள் மற்றும் வங்கதேசத்தினர் அடங்குவர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 6 மில்லியன் லிட்டர் எரிபொருளை சட்டவிரோதமாக கடத்திய குற்றச்சாட்டின் பேரில் குறித்த கப்பல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். நிறுத்த உத்தரவுகளை புறக்கணித்தல், […]

இலங்கை

வெளிநாட்டில் உள்ளோர் இலங்கைக்கு அனுப்பிய பணம் சாதனை பதிவு

  • December 13, 2025
  • 0 Comments

வெளிநாட்டில் பணிபுரிவோர், இலங்கைக்கு மேற்கொண்ட பண அனுப்பல் நவம்பர் மாதத்தில் 673.4 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது. அதற்கமைய, 2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பணவனுப்பல் 7.19 பில்லியன் டொலராக பதிவாகியுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 20.7 சதவீத அதிகரிப்பு என இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகம் முக்கிய செய்திகள்

சர்வதேச கடற்பகுதியில் அத்துமீறும் அமெரிக்கா – சர்ச்சையை கிளப்பிய புதிய விடயம்!

  • December 13, 2025
  • 0 Comments

சீனாவிலிருந்து ஈரானுக்கு பயணித்த  சரக்குக் கப்பல் ஒன்றை அமெரிக்க படைகள் சோதனை செய்துள்ள விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா சமீபகாலங்களில் கடற்பகுதியில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதை இந்த சம்பவம் பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (Wall Street Journal) நேற்று வெளியிட்ட அறிக்கையில்,  சீனாவிலிருந்து ஈரானுக்கு பயணித்த சரக்கு கப்பல்களை அமெரிக்கப் படைகள் தடுத்து நிறுத்தியது இதுவே முதல் முறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “ஈரானின் வழக்கமான ஆயுதங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்” பொருட்களை அக்கப்பலில் […]

ஐரோப்பா செய்தி

UKவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி கோமாவிற்கு சென்றதால் பரபரப்பு!

  • December 13, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் காய்ச்சல் அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் கோமா நிலைக்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 04 வயதான சியன்னா டுனியன் (Sienna Dunion) என்ற சிறுமி ப்ளூ  காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு அரிதான மற்றும் கடுமையான மூளை கோளாறை ஏற்படுத்தும் அக்யூட் நெக்ரோடைசிங் என்செபாலிடிஸ் ( Acute Necrotising Encephalitis) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவருடைய நிலை மோசமடைந்ததை தொடர்ந்து உடனடியாக  நாட்டிங்ஹாமில் (Nottingham) உள்ள குயின் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டு […]

உலகம்

மெஸ்ஸியின் கொல்கத்தா நிகழ்ச்சியில் வன்முறை: மன்னிப்பு கேட்ட மம்தா

  • December 13, 2025
  • 0 Comments

கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியை காண முடியாத விரக்தியில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அர்ஜெண்டினா அணியின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இன்று கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்துக்கு வருகை தந்தார். அவரை காண்பதற்காக ரூ.5 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை டிக்கெட்டுகள் பெற்று ரசிகர்கள் மைதானத்தில் காத்திருந்தனர். கொல்கத்தாவிலிருந்து மட்டுமல்லாமல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மெஸ்ஸியை நேரில் பார்ப்பதற்காக வந்திருந்தனர். லியோனல் […]

இலங்கை

பேரிடரால் பாதிக்கப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு முக்கிய அறிவித்தல்!

  • December 13, 2025
  • 0 Comments

பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட தொழில்கள் தொடர்பாக தொழில்துறை பேரிடர் உதவி மையம் இதுவரை 13,698 தரவுகளை பெற்றுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சகம் இன்று  தெரிவித்துள்ளது. இதுவரை 5,639 நுண் வணிகங்கள், 4,636 சிறு வணிகங்கள், 2,986 நடுத்தர வணிகங்கள் மற்றும் 437 பெரிய வணிகங்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுள்ளதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில், பாதிக்கப்பட்ட தொழில்கள் குறித்து தெரிவிக்க அமைச்சகம் 0712666660 என்ற ஹாட்லைன் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. தகவல்களை விரைவில் வழங்குமாறு தொழில்துறையினரை அமைச்சகம் கேட்டுக் […]

இலங்கை

வெளிநாட்டு நிவாரண உதவிகளை முறையாக பகிர்ந்தளிக்க தீவிர கண்காணிப்பு

  • December 13, 2025
  • 0 Comments

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுவரும் நிவாரணப் பொருட்களை முறையாக பகிர்ந்தளிக்க அரசாங்கம் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையத்தால் (NDRSC) இயக்கப்படும் ஒருகொடவத்தை களஞ்சியசாலை வளாகத்திற்கு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டு நிவாரண உதவிகளின் சேமிப்பு மற்றும் விநியோக நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். இந்த விஜயத்தின் போது, பிரதி அமைச்சர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அத்தியாவசிய நிவாரணப் பொருட்களின் விநியோக ஏற்பாடுகள் […]

அரசியல் இலங்கை செய்தி

18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடக்கப்போவது என்ன?

  • December 13, 2025
  • 0 Comments

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கான விசேட கூட்டமொன்று எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளதென தெரியவருகின்றது. அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் சபாநாயகர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். எதிர்வரும் 18 ஆம் திகதி விசேட நாடாளுமன்ற கூட்டம் நடைபெறவுள்ள நிலையிலேயே மேற்படி சந்திப்பும் இடம்பெறுகின்றது. அத்துடன், நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக்குழுவும் கூடவுள்ளது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் நோக்கிலேயே கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரண […]

error: Content is protected !!