உலகம்

”கருப்பை இருந்தால் பெண், இல்லையென்றால் பெண் இல்லை” – மஸ்கின் கருத்தால் சர்ச்சை!

  • December 14, 2025
  • 0 Comments

உலக செல்வந்தரான எலான் மஸ்க் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “உனக்கு கருப்பை இருந்தால், நீ ஒரு பெண். இல்லையென்றால், நீ ஒரு பெண் அல்ல” என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். சுமார் 30 மில்லியனுக்கும்  அதிகமான பார்வையாளர்களை பெற்ற இந்த பதிவுதொடர்பில் பலர் விமர்சித்து வருகின்றனர். பல பயனர்கள் மஸ்கின் கருத்தை ஆதரித்துள்ள அதேநேரம் ஏனையவர்கள் MRKH நோய்க்குறி அல்லது கருப்பை நீக்கம் போன்ற மருத்துவ நிலைமைகள் மற்றும் திருநங்கை […]

இலங்கை

முகாம்களில் தங்கியுள்ள 7000 மக்களை 03 மாதங்களில் மீள் குடியேற்ற தீர்மானம்!

  • December 14, 2025
  • 0 Comments

இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 7000 மக்களை அடுத்த மூன்று மாதங்களுக்குள் மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். டித்வா புயலால் சேதமடைந்த பகுதிகளை புனரமைப்பது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், 6,138 வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு சிறிது நேரம் எடுக்கும் என்றும் கூறினார். தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) […]

உலகம்

இயந்திரக் கோளாறு : புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தரையிறங்கிய விமானம்!

  • December 14, 2025
  • 0 Comments

வொஷிங்டன் (Washington), டி.சி.யில் இருந்து டோக்கியோவிற்குச் (Tokyo)  சென்ற யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம்  புறப்பட்ட சிறிது நேரத்திலேயே டல்லஸ் (Dulles) சர்வதேச விமான நிலையத்திற்கு  திருப்பிவிடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. போயிங் 777-200 விமானத்தில் இயந்திர சக்தி செயலிழந்ததன் காரணமாக மேற்படி விமானம் திருப்பிவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தரையிறங்கிய விமானம் ஓடுபாதையில் சிறிய அளவில் தீவிபத்துக்குள்ளானதாகவும்   அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 275 பயணிகள் மற்றும் 15 பணியாளர்களை ஏற்றிச் சென்ற விமானம், புறப்பட்ட சுமார் ஒரு மணி நேரத்திற்குப் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கார் திருட்டு சம்பவங்கள் – மக்களின் கவனத்திற்கு!!

  • December 14, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் விமான நிலைய பார்க்கிங்கை இலக்காகக் கொண்ட கார் திருட்டுகள் அதிகரித்து வருவது தொடர்பில் காவல்துறையினர் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். இது தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாகவும் பயணிகள்   “அதிகாரப்பூர்வமற்ற” நீண்ட கால பார்க்கிங் நடத்துபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விமான நிறுவன விதிகளை மீறாத வரை எவரும் பார்க்கிங் ஆபரேட்டராக (operator) வர்த்தகம் செய்யலாம். மோசடி நிறுவனங்கள் பெரும்பாலும் சரியான ஒப்பந்தங்களைக் கொண்டிருக்கவில்லை, இதனால் கட்டுமான தளங்கள் அல்லது வயல்கள் போன்ற பாதுகாப்பற்ற நிலங்களில் இடவசதியை செய்துக் […]

இலங்கை

100 செயற்கைக்கோள் இணைய அலகுகளை இலங்கைக்கு வழங்கும் ஸ்டார்லிங்க்!

  • December 14, 2025
  • 0 Comments

நாட்டில் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஸ்டார்லிங்க் (Starlink)  100 செயற்கைக்கோள் இணைய அலகுகளை நன்கொடையாக அளித்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சக செயலாளர் டாக்டர் ஹர்ஷன சூரியப்பெரும இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கமைய  இது தகவல் தொடர்பு மற்றும் இணைப்பை கணிசமாக மேம்படுத்தும், அதிகாரிகள் நிவாரணம் மற்றும் அவசரகால மீட்பு நடவடிக்கைகளை மிகவும் திறமையாக மேற்கொள்ள உதவும் என அவர் […]

இலங்கை செய்தி

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் திட்டம் – இதுவரை 3.4 பில்லியன் சேகரிப்பு!

  • December 14, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நிதியத்திற்கு (Rebuilding Sri Lanka)  இதுவரை   3,421 மில்லியனுக்கும் அதிகமான தொகை கிடைக்கப்பெற்றுள்ளதாக  நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் டாக்டர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். உள்ளூர் வணிகர்கள், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த நிதிக்கு பங்களித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி, இதுவரை பெறப்பட்ட மொத்த பணம்  3.4 பில்லியனாகும்.  இது அமெரிக்க வழங்கிய 11 […]

உலகம் செய்தி

பெலாரஸில் தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட கைதிகளை ஏற்ற உக்ரைன்!

  • December 14, 2025
  • 0 Comments

“உளவு பார்த்தல், பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம்” உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 123 பேரை பெலாரஸ்ய அரசாங்கம் நேற்று விடுவித்துள்ள நிலையில் அவர்கள் உக்ரைனுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட கைதிகளில் இரண்டு முக்கிய பெலாரஷ்ய ஆர்வலர்கள், நோபல் பரிசு வென்ற அலெஸ் பியாலியாட்ஸ்கி (Ales Bialiatski)  மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மரியா காலெஸ்னிகாவா (Maria Kalesnikava) ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. கைதிகளில் 114 பேர் உக்ரைனுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மீதமுள்ள ஒன்பது பேர்,   லிதுவேனியாவுக்கு மாற்றப்பட்டதாக உக்ரைன் […]

உலகம் செய்தி

இஸ்ரேலுக்கு எதிராக யார் கையை உயர்த்தினாலும் அவர்களின் கை துண்டிக்கப்படும்!

  • December 14, 2025
  • 0 Comments

ஹமாஸ் தலைவர் ரேத் சாத்தை (Raed Saad) படுகொலை செய்ய உத்தரவிட்டதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) நேற்று உறுதிப்படுத்தியுள்ளார். இஸ்ரேலியப் படைகள் மீதான தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கத்தோடு மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலுக்கு எதிராக யார் கையை உயர்த்தி, ஐடிஎஃப் வீரர்களுக்கு தீங்கு விளைவித்தாலும், அவர்களின் கை காசாவிலும் மற்ற எல்லா இடங்களிலும் துண்டிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலின் அனைத்து குடிமக்களின் சார்பாக,  காயமடைந்த போராளிகள் விரைவில் […]

அரசியல் இலங்கை செய்தி

பேரிடர் முகாமைத்துவத்திற்கான சிறப்பு தேசிய சபைக் கூட்டம் நாளை

  • December 14, 2025
  • 0 Comments

பேரிடர் முகாமைத்துவத்திற்கான சிறப்பு தேசிய சபைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர். பிரதம அமைச்சர் இணைத்தலைமை வகிப்பார் 2004 ஆம் ஆண்டு சுனாமியைத் தொடர்ந்து, 2005 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க பேரிடர் முகாமைத்துவ சட்டத்தின் கீழ் இந்த சபை நிறுவப்பட்டது. எனினும், அச்சபையின் செயல்பாடு இயங்கா நிலையிலேயே இருந்து வந்தது. எனவே , மேற்படி சட்டத்தில் […]

அரசியல் இலங்கை செய்தி

இந்தியாவுக்கு இணையாக சீனாவும் களத்தில்: பீஜிங் உயர்மட்ட தலைவர் 23 ஆம் திகதி கொழும்பு விஜயம்!

  • December 14, 2025
  • 0 Comments

சீனாவின் உயர்மட்ட அரசியல் தலைவர் ஒருவர் கொழும்புக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 23 ஆம் திகதி அவரது விஜயம் இடம்பெறும் என்று ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சீன அரசாங்கத்தின் மூன்றாவது அதிஉயர் அதிகாரம் படைத்தவரான, சீன தேசிய மக்கள் காங்கிரசின் நிலையியல் குழு தலைவரான சோ லெஜி என்பவரே இரு நாள் விஜயமாக இலங்கை வருகின்றார். பேரிடருக்குப் பின்னர், இலங்கைக்கு உதவுவதில் இந்தியாவும், அமெரிக்காவும் அதிகளவில் கவனம் செலுத்தி வருகின்றது. இந்நிலையிலேயே தமது உதவி […]

error: Content is protected !!