அரசியல் இலங்கை செய்தி

பேரிடரால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு எவ்வளவு? புள்ளி விபரம் கோருகிறது ஐதேக!

  • December 15, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்கப்படும் என்பன தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவே இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு, “ 6 ஆயிரம் வீடுகள் முழுமையாக சேதமடைந்திருந்தால் 6 ஆயிரம் கோடி ரூபா வழங்கப்பட வேண்டும். இது எவ்வாறு கையளிக்கப்படும்? பகுதியளவு […]

உலகம் பயணம்

உலகின் நீண்ட வணிக விமானப் பாதையை கடந்து சாதனை படைத்த சீனா!

  • December 15, 2025
  • 0 Comments

உலகின் மிக நீண்ட வணிக விமானப் பாதையை சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் (China Eastern Airlines ) 29 மணி நேரத்தில் கடந்து சாதனை படைத்துள்ளது. டிசம்பர் 4 ஆம் திகதி ஷாங்காயிலிருந்து புறப்பட்ட விமானம், 12,400 மைல்களை குறிப்பிட்ட நேரத்தில் கடத்துள்ளது. எரிபொருள் நிரப்புதல் மற்றும் பணியாளர் சுழற்சிக்காக நியூசிலாந்தின் ஆக்லாந்தில் நிறுத்தப்பட்ட பிறகு, மீண்டும் அர்ஜென்டினாவின் (Argentina) பியூனஸ் அயர்ஸை (Buenos Aires) வந்தடைந்துள்ளது. 316 இருக்கைகள் கொண்ட போயிங் 777-300ER மூலம் இயக்கப்படும் […]

இலங்கை

சிட்னி தாக்குதல் – இலங்கையர்களுக்கு பாதிப்பு இல்லை!

  • December 15, 2025
  • 0 Comments

சிட்னியின் போண்டி கடற்கரையில் நேற்று நடந்த யூத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இலங்கையர்கள் யாரும் காயமடையவில்லை என்பதை வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திர உறுதிப்படுத்தியுள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர்,  இந்த விவகாரம் குறித்து மேலும் ஆராய்ந்து வருவதாகவும், மேலும் தகவல்களைச் சேகரிப்பதாகவும் கூறினார். சிட்னியின் மிகவும் பிரபலமான கடற்கரையான போண்டி கடற்கரையில் நடந்த யூத பண்டிகை கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பதினாறு பேர் […]

அரசியல் இலங்கை செய்தி

மக்கள் என்னுடன் “செல்பி” எடுக்கின்றனர்: அடுத்த ஜனாதிபதி நான் தானா?

  • December 15, 2025
  • 0 Comments

மக்கள் மத்தியில் எனக்கு செல்வாக்கு இருந்தாலும் ஜனாதிபதி பதவிக்கு வரவேண்டும் என்ற கனவு ஒருபோதும் கிடையாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நாம் கட்டியெழுப்ப வேண்டும். அடுத்த தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற முடியாவிட்டால்கூட குறைந்தபட்சம் 25 எம்.பிக்களாவது கட்சி […]

அரசியல் இலங்கை செய்தி

சுதந்திரக்கட்சி யாப்பில் விரைவில் திருத்தம்! சாமரவுக்கு புதிய பதவி!

  • December 15, 2025
  • 0 Comments

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு சிரேஸ்ட உப தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மற்றும் மத்திய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போதே மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், புதிய தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் நியமனங்களும் விரைவில் வழங்கப்படவுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாப்பை மறுசீரமைப்பது பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. உள் கட்சி ஜனநாயகத்தை […]

உலகம்

கொலம்பியாவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – பலர் பலி!

  • December 15, 2025
  • 0 Comments

வடக்கு கொலம்பியாவின் கிராமப்புறப் பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பாறையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்தாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளதாக துணை ஆளுநர் ஆண்ட்ரெஸ் ஜூலியன் (Andres Julian)  உறுதிப்படுத்தியுள்ளார். விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார். கரீபியன் நகரமான டோலுவிலிருந்து (Tolu ) மெடலினுக்குப் (Medellin) பயணித்துக்கொண்டிருந்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக அவர் தெரிவித்துள்ளார். விபத்து குறித்த விசாரணைகள் […]

இலங்கை

பயண அட்டை – பாடசாலை மாணவர்களுக்கு விசேட சலுகை!

  • December 15, 2025
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் நாளைய தினம் பாடசாலைகள் மீளவும் திறக்கப்படவுள்ளன. இந்நிலையில் மாணவர்கள் கடந்த நவம்பர் மாதத்திற்கான பயண அட்டையை பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய அறிவிப்பை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துணை அமைச்சர் பிரசன்ன குணசேன அறிவித்துள்ளார். இதேவேளை பேரிடரால் பாதிக்கப்பட்ட கல்வி நடவடிக்கைகளை மீட்டெடுக்க நிதி திரட்டும் நோக்கில் ஆசிரியர்கள் ஜனவரி மாதத்தில் ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கத் தயாராக இருப்பதாக துணை அமைச்சர் மஹிந்த […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கை மீண்டெழ ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் உதவி கோருகிறார் சஜித்!

  • December 15, 2025
  • 0 Comments

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதி Takafumi Kadono ஐ எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று சந்தித்து பேச்சு நடத்தினார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. டித்வா சூறாவளி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே மேற்படி சந்திப்பு நடந்ததாக எதிர்க்கட்சி தலைவரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. “இலங்கை வங்குரோத்து நிலையை எதிர்கொண்டிருந்தது. அவ்வேளை நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியான்மைகள் மற்றும் தொழில்முனைவோரை தொழில் ரீதியாக கட்டியெழுப்புவதற்கு உதவி […]

ஐரோப்பா

பிரித்தானியா : MI6 உளவுத்துறை தலைவரின் முதலாவது உரை – மக்களின் எதிர்பார்ப்பு!

  • December 15, 2025
  • 0 Comments

பிரித்தானியாவின் MI6 உளவுத்துறை தலைவரான பிளேஸ் மெட்ரெவெலி (Blaise Metreweli) தனது முதலாவது உரையில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடர்பில் எச்சரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரகசிய புலனாய்வு சேவையின் தலைவராகப் பொறுப்பேற்ற மெட்ரெவேலி ( Metreweli) பிரிட்டனின் வெளிநாட்டு உளவு நிறுவனத்திற்குத் தலைமை தாங்கும் முதல் பெண்மணி ஆவார். அவர் இன்று தனது முதலாவது உரையை நிகழ்த்தவுள்ளார். இதன்போது ரஷ்ய பிரதிநிதிகளால் முன்னெடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சைபர் தாக்குதல்கள் உள்பட ட்ரோன் ஊடுருவல்கள் வரை பலவற்றை எடுத்துரைப்பார் எனக் கூறப்படுகிறது. […]

உலகம்

சீன தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜிம்மி லாய் குற்றவாளி என அறிவிப்பு!

  • December 15, 2025
  • 0 Comments

சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டங்களுக்கு அமைய ஜிம்மி லாயை குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் படைகளுடன் கூட்டுச் சதி செய்ததாகக் கூறி, ஹாங்காங்கின் உயர் நீதிமன்றம் இன்று  இந்த தீர்ப்பை வழங்கியது. இதற்கமைய அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஹாங்காங் நீதிமன்றத்தின் சுதந்திரத் தன்மை குறித்தும் விமர்சகர்கள் மத்தியில் கருத்து முரண்பாடு எழுந்துள்ளது.    

error: Content is protected !!