விளையாட்டு

ஆசியக்கோப்பை இரத்து? பிசிசிஐ எடுத்துள்ள புதிய தீர்மானம்

ஆசியக்கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் நிலையில், இந்தியா பங்கேற்காது என அறிவித்துள்ளது.

இந்த நிலையில் பிசிசிஐ 5 நாடுகள் கொண்ட கிரிக்கெட் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்.

பிசிசிஐ 5 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசியக்கோப்பை 2023 தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா விளையாடும் போட்டியை வேறு பொதுவான நாடுகளில் உள்ள மைதானத்தில் நடத்த பாகிஸ்தான் வாரியம் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக ஒட்டுமொத்த ஆசியக்கோப்பை தொடரும் பாகிஸ்தானை விட்டு வேறு நாட்டிற்கு மாற்றப்படும் எனக்கூறப்பட்ட நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, இத்தகைய ஆலோசனையை முன்வைத்தது. மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தன் முடிவில், உறுதியாக இருப்பதால் ஆசியக்கோப்பை தொடர் ரத்து செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருவேளை ஆசியக்கோப்பை தொடர் ரத்து செய்யப்பட்டால் இந்திய கிரிக்கெட் வாரியம், 5 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

SR

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!