இலங்கை

கொழும்பில் பெண் ஒருவர் கழுத்தை அறுத்து படுகொலை

மொரட்டுவ, இந்திபெத்த, பேக்வத்த பகுதியில் பெண்ணொருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் நேற்று காலை 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், கொல்லப்பட்ட பெண்ணின் வயது 51 என தெரிவிக்கப்படுகிறது.

படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் கடந்த டிசம்பர் மாதம் சிறையில் இருந்த போது தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். இந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த கணவரின் உறவினர் ஒருவராலேயே குறித்த பெண் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

கொலையை செய்த சந்தேக நபர் இன்று பிற்பகல் 1.00 மணியளவில் மொரட்டுமுல்ல பொலிஸாரிடம் வந்து சரணடைந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 23 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்