744 பயணிகளுடன் இலங்கை வந்த பிரம்மாண்ட கப்பல்!
பஹாமாஸ் அரசுக்கு சொந்தமான இம்ப்ரஸ் என்ற கப்பல் ஒன்று இலங்கை வந்துள்ளது.
குறித்த கப்பலில் 744 பேர் வருகை தந்துள்ளனர். உலகம் முழுவதும் பயணம் செய்து வரும் இம்ப்ரஸ் கப்பலானது, திருகோணமலை துறைமுகத்தில் உள்ள அஷ்ரஃப் துறையில் நிறுத்தப்பட்டது.
திருகோணமலை துறைமுகத்திலிருந்து இலங்கை வந்திறங்கிய இந்த சுற்றுலாப் பயணிகள் தம்புள்ளை, சிகிரியா, திருகோணமலை போன்ற இடங்களுக்குச் செல்வுள்ளனர்.
அதன் பின்னர், இந்தக் கப்பல் இந்தியாவின் சென்னை துறைமுகத்துக்குப் புறப்படும் என்று துறைமுக அதிகார சபையின் வதிவிட முகாமையாளர் சமன் பெரேரா தெரிவித்தார்.
(Visited 10 times, 1 visits today)





