Site icon Tamil News

அமெரிக்காவில் பேருந்திற்காக காத்திருந்தவர்கள் மீது கார் மோதி விபத்து – 7 பேர் பலி!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கார் ஒன்று பேருந்திற்காக காத்திருந்த மக்கள் மீது மோதியதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரவின்சிலெவி நகரத்தில் உள்ள ஓசனம் பகுதியில் புலன் பெயர்ந்த தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதற்காக பேருந்திற்கு காத்திருந்த சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உண்மையிலேயே கார் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நடந்ததா? அல்லது சதி வேலை காரணமாக திட்டமிட்டு காரை ஏற்றி தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டார்களா? என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version