இலங்கை

இணையத்தில் பரவி வரும் போலி விண்ணப்பங்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இணையத்தில் பரவிவரும் போலி கொரிய மொழி விண்ணப்பப் படிவத்தை நம்பி ஏமாற வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.

விண்ணப்பப் படிவம் இன்னும் வெளியிடப்படவில்லை என்றும், தகவலின் விளக்கம் மட்டுமே உள்ளது என்றும் பணியகம் வலியுறுத்துகிறது.

2024ஆம் ஆண்டு கொரிய மொழிப் பரீட்சை தொடர்பான விண்ணப்பப் படிவம் தற்போது இணையத்தில் பரவி வருவதாகவும், கொரிய மொழிப் பரீட்சைக்கும் தொடர்பில்லாத ஒரு போலி விண்ணப்பப் படிவமே இவ்வாறு பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் பரீட்சை விண்ணப்பம் முற்றிலும் போலியானது என்பதை கொரிய HRDK நிறுவனமும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த போலியான கூகுள் படிவங்களுக்கு தமது தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்