வட அமெரிக்கா

அமெரிக்காவில் குழந்தையை தவறுதலாக ஓவனில் தூங்க வைத்த தாய்: பின்னர் நேர்ந்த சோகம்!

அமெரிக்காவில் தாய் ஒருவர் தனது குழந்தை ஓவனில் தூங்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் மிசோரியின் கன்சாஸ் நகரை சேர்ந்த மரியா தாமஸ் என்ற பெண் ஒருவர், தன்னுடைய கவனக்குறைவால் குழந்தையை இழந்துள்ளார்.

மரியா தாமஸ் குழந்தையை தூங்க வைத்துவிட்டு அதை தொட்டிலுக்கு பதிலாக தவறுதலாய் ஓவன் அடுப்பில் வைத்துள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதோடு, சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.அத்துடன் குழந்தைக்கு வெளிப்படையான தீக்காயங்களும் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மதியம் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், குழந்தையின் தாயார் மீது குழந்தையின் உயிருக்கு ஏற்படுத்தியதற்கான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.ஆனால் இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பதை ஊகிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

(Visited 12 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்