பென்சில்வேனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் உயிரிழப்பு!

பென்சில்வேனியாவில் வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இவர்களுல் மூவர் குழந்தைகளாவர். தீவிபத்து ஏற்படுவதற்கு முன்னதாக துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
ஆகவே தாக்குதல்தாரி வேண்டுமென்றே தீவைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான நபர் சம்பவத்தில் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. துப்பாக்கிதாரி 43 வயதான கேன் லீ என சின் லீ அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 11 times, 1 visits today)