சீனாவை உலுக்கிய பனிப்புயல் – வாகனங்களுடன் சிக்கிய மக்கள்
சீனாவின் ஹுபே மாகாணத்தில் வாகனங்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
அங்கு வீசிவரும் பனிப்புயலால் நெடுஞ்சாலைகளில் பனி போர்த்தியால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் பத்தாம் திகதி சீன புத்தாண்டை முன்னிட்டு கொண்டாடப்படும் வசந்த கால திருவிழாவுக்காக சொந்த ஊருக்கு திரும்பிய ஏராளமானோர் நெடுஞ்சாலையில் வாகனங்களுடன் சிக்கிக்கொண்டனர்.
அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள், அவர்களுக்கு தற்காலிக கூடாரங்கள் அமைத்து கொடுத்தும், உணவு, குடிநீர் போன்றவற்றை அளித்தும் உதவினர்.
(Visited 9 times, 1 visits today)