இலங்கை

இலங்கை கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு

இலங்கை அரச பாடசாலைகளில் தரம் ஒன்று முதல் 5 வரையான சகல ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் மார்ச் முதல் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக 16 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், அண்மையில் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், குறித்த பணிகளில் ஈடுபடுவோருக்கு கடந்த வருடத்தில் செலுத்தும் கட்டணத்தையே செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

(Visited 7 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content