ஐரோப்பா

பிரித்தானியாவில் உணவின்றி தந்தையை கட்டியணைத்தபடி பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

பிரித்தானியாவில்  உணவின்றி தந்தையை கட்டியணைத்தபடி பரிதாபமாக உயிரிழந்த குழந்தை ஒன்று தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

2 வயது குழந்தையுடன் வீட்டில் தனியாக வசித்துவந்த தந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், உணவளிக்க ஆளின்றி குழந்தையும் பட்டினி கிடந்து இறந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

60 வயதான கென்னத் தனது 2 வயது மகன் பிரான்சனுடன் லிங்கன்ஷைர் நகரில் தனியாக வசித்துவந்தார்.

குழந்தையை கவனிக்க சென்ற சமூக சேவகர் ஒருவர், வீட்டை யாரும் திறக்காததால் உரிமையாளரிடம் சாவியை வாங்கிக்கொண்டு கதவை திறந்து உள்ளே சென்றபோது, இறந்துபோன தந்தையை கட்டியனைத்தபடி மகனும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

2 வாரங்களுக்கு முன்பே கென்னத் மாரடைப்பால் இறந்ததும், உணவளிக்க ஆளின்றி பசியால் குழந்தையும் இறந்ததும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!