இலங்கை

இலங்கையில் 72 சுகாதார நிபுணர் சங்கங்கள் இன்று பணிப்புறக்கணிப்பு!

இலங்கையில் 72 சுகாதார நிபுணர் சங்கங்கள் இணைந்து அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

இன்று காலை 6.30 முதல் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

மருத்துவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்க தீர்மானித்துள்ள 35,000 ரூபாய் போக்குவரத்து கொடுப்பனவை தங்களுக்கும் வழங்க வேண்டும் என கோரி, அவர்கள் இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

மருத்துவ ஆய்வுக்கூட நிபுணர்கள், கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள், மருந்தாளர்கள், தாதியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் நோயாளர் காவு வண்டி ஊழியர்கள் உள்ளிட்ட 72 தொழிற்சங்கங்கள் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், பணிப்புறக்கணிப்பினால், புற்றுநோய், சிறுநீரகம், மகப்பேறு மற்றும் சிறுவர் வைத்தியசாலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய நோயாளர் பராமரிப்பு சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என தொழிற்சங்க பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.

இந்தநிலையில், பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும், சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

குறித்த சந்திப்பானது முற்பகல் 11 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

See also  இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழைக்கு வாய்ப்பு!

அதில் எவ்வித இணக்கப்பாடுகளும் ஏற்படாவிட்டால், தொடர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content