ஆஸ்திரேலிய அரசாங்கம் விசா தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம்
திறன் அடிப்படையிலான பட்டதாரிகளுக்கான ஆஸ்திரேலியா விசா திட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
விசா வழங்கும் முறையின் கீழ், பொறியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஆஸ்திரேலியா விசாவைப் பெறுவதற்கான திறனைக் கொண்டிருந்தனர்.
ஆனால் நேற்று முதல் அதனை மட்டுப்படுத்த உள்விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, சமர்ப்பிக்கப்படாத வீசா விண்ணப்பங்களை கைவசம் வைத்திருக்கும் நபர்களுக்கு அதற்காக செலவிடப்பட்ட தொகையை மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
(Visited 8 times, 1 visits today)