ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் சிரிப்பு வாயுவை தடைசெய்ய நடவடிக்கை!

பிரித்தானியாவில் சமூகவிரோத நடத்தைகளை கட்டுப்படுத்தும் அரசின் திட்டங்களின் கீழ் நைட்ரஸ் ஆக்சைட்டை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பை இன்று லெவலிங் அப் செயலர் மைக்கேல் கோவ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர்,  எங்கள் முக்கிய நகரங்களில் உள்ள பூங்காக்களில் நடக்க வாய்ப்புள்ள எவரும் இந்த சிறிய வெள்ளி குப்பிகளை பார்த்திருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்.

அவை பொது இடங்களை கெடுப்பது மட்டுமல்ல, போதைப்பொருள் உட்கொள்வதற்கான எடுத்துக்காட்டுகளாகும். இது ஒரு உளவியல் மற்றும் நரம்பியல் விளைவைக் கொண்டிருக்கலாம் .மற்றும் ஒட்டுமொத்த சமூக விரோத நடத்தைக்கு பங்களிக்கும் எனக் கூறினார்.

நைட்ரஸ் ஆக்சைடு பொதுவாக சிரிப்பு வாயு என்று அழைக்கப்படுகிறது.  இது இங்கிலாந்தில் கஞ்சாவிற்குப் பிறகு பயன்படுத்தப்படுகிற இரண்டாவது மருந்தாக காணப்படுகிறது.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!