இலங்கையர்களுக்கு காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
எதிர்வரும் தினங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அறிவிப்பு இன்று (12) பிற்பகல் 1.00 மணி முதல் நாளை (13) பிற்பகல் 1.00 மணி வரை அமுலில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மேல், மத்திய, சப்ரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சில இடங்களிலும் 100 மி.மீ.க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், நாட்டைச் சூழவுள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக, நாட்டைச் சூழ மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
(Visited 11 times, 1 visits today)





