ஐரோப்பா

ஜெர்மனியில் இராணுவ தளபதியின் அதிர்ச்சி செயல்

ஜெர்மனியின் முக்கிய ராணுவ தளபதியான மேஜர் ஜெனரல் மாஸ்கோஸ் ஸ்டுவஸ்டன் அவர்களின் பதவி பறிப்பட்டுள்ளது.

இந்த ராணுவ தளபதியின் பதவி பறிப்பை ஜெர்மனியுடைய ஜனாதிபதி ஃபிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர் அவர்கள் ஏற்றுக்கொண்டதாக தெரியவந்துள்ளது. அதாவது டுசில்டோ நகரத்தில் ஒரு விழா நடைபெற்றுள்ள நிலையில் பல ராணுவத்தினர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் குறிப்பிடப்பட்ட ராணுவ தளபதியானவர் விழாவில் பங்குப்பற்றிய சிலரிடம் பாலியல் ரீதியில் தகாத முறையில் நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.

இதனடிப்படையில் இவருக்கு எதிராக ஒழுக்காடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், இந்த ஒழுக்காட்டு நடவடிக்கையின் படி இவரின் பதவி பறிக்கப்பட்டு ஓய்வு நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!