அரச ஊழியர்களுக்கான ஊதியம் குறித்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளியிட்டுள்ள கருத்து!

இந்த வருடம் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் நிச்சயம் அதிகரிக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த சம்பள அதிகரிப்பு இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், எவ்வளவு சம்பளம் உயர்த்தப்படும் என்பது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாள் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 13 times, 1 visits today)