இலங்கை செய்தி

இலங்கையில் புதிய சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிக்க சீனா திட்டம்

பல பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தை சீனாவின் அரச நிறுவனமொன்றுக்கு வழங்க உள்ளதாக இலங்கை எரிசக்தி அமைச்சர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

தெற்கு நகரமான ஹம்பாந்தோட்டையில் சீனாவினால் நடத்தப்படும் துறைமுகத்திற்கு அடுத்ததாக சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிக்க அரசாங்கம் விரைவில் சினோபெக் நிறுவனத்துடன் முதலீட்டு ஒப்பந்தத்தில் ஈடுபடும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

ஓரிரு வாரங்களில் அவர்களுடன் ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்வோம், ”என்று அமைச்சர் விஜேசேகர கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.

2019 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் உள்ள இந்திய குடும்பத்திற்கு சொந்தமான நிறுவனத்திற்கு 3.85 பில்லியன் டொலர் மதிப்பீட்டைக் கொண்ட இந்த திட்டத்தை இலங்கை முதலில் வழங்கியது.

எனினும், கட்டுமானத்தைத் தொடங்கத் தவறியதை அடுத்து, சுத்திகரிப்பு நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட 1,200 ஏக்கர் (485 ஹெக்டேர்) நிலத்தை மீண்டும் கையகப்படுத்தி, ஆகஸ்ட் மாதத்தில் அரசாங்கம் ஒப்பந்தத்தை நிறுத்தியது.

ஹம்பாந்தோட்டை ஆழ்கடல் துறைமுகம் 2017 ஆம் ஆண்டு சீன அரசுக்கு சொந்தமான நிறுவனமொன்றுக்கு 99 வருடங்கள் குத்தகைக்கு விடப்பட்டது. இத்திட்டத்திற்காக 1.4 பில்லியன் டொலர் கடனை இலங்கை செலுத்த முடியாமல் போனது.

இலங்கையின் இருதரப்புக் கடனில் 52 சதவீதத்தை சீனா வைத்துள்ளது, மேலும் கொழும்பின் எந்தவொரு முயற்சியிலும் நிலுவையில் உள்ள கடன்களை மறுசீரமைப்பதற்கு பெய்ஜிங்கின் அனுமதி முக்கியமானது.

(Visited 14 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை