இலங்கை

தலவாக்கலை- மின்பிறப்பாக்கி புகையால் 10 பேர் பாதிப்பு

தலவாக்கலை நகரில் இயங்கும் ஆடையகத்தில் பணியாற்றி வரும் பத்து பேருக்கு திடீரென ஏற்பட்ட சுவாச பிரச்சினை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தலவாக்கலை நகரில் மின்சாரம் துன்டிக்கப்பட்ட நிலையில் குறித்த ஆடையகத்தில் மின்பிறப்பாக்கி (ஜெனரேட்டர்) இயக்கப்பட்டுள்ளது.

மின்பிறப்பாக்கியில் இருந்து வெளியான புகையினால் ஆடையகத்தில் பணியாற்றிய 9 பெண்கள் உட்பட ஆண் ஒருவருக்கு மூச்சி திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளதுடன் அதிகமாக இருமலும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட ஊழியர்களை லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த பின் மேலதிக சிகிச்சைக்காக இவர்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டு தீவீர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.

(Visited 9 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்