திருமணமான மகளுடன் தகாத உறவு… தட்டி கேட்ட தந்தையை வெட்டி கொன்ற இளைஞர்!
திருமணமான மகளிடம் தொடர்ந்து பேசி வந்த இளைஞரை தட்டிக் கேட்க சென்ற பெண்ணின் தந்தையை வெட்டி கொன்ற இளைஞர்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை செக்கடி தெருவை சேர்ந்த முனியாண்டி (38)தக்காளி வியாபாரி இவருடைய மகள் அம்முவை சிவகங்கையில் 10 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொடுத்துள்ளார் முனியாண்டி வீட்டு அருகே உள்ள இளைஞர் பாலசுப்பிரமணியன் தொடர்ந்து திருமணம் ஆன அம்முவிடம் பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இன்று காலை முனியாண்டி பாலசுப்பிரமணியம் வீட்டிற்கு சென்று அது குறித்து கேட்க சென்றுள்ளார் இதில் வாய் தகராறு ஏற்பட்டு பாலமுருகன் என்ற இளைஞர் முனியாண்டியை வெட்டியதில் படுகாயம் அடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பலியானார் கொலையாளி பாலமுருகன் மீது மானாமதுரை பொலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.